Wednesday, April 4, 2018

கலவரம்.!

நாளெல்லாம் பட்டினியாய்
நகரெல்லாம் தீக்கிரையாய்
பாவிகளின் வன்செயலால்
பாரெல்லாம் கலவரமாய்


கலவரம் மூள்வதாலே
புலம்பெயர்வோர் ஏராளம்
கலவரக் கார்களோ
புதைகுழிக்குள் தாராளம்

அமைதியாய் வாழ்ந்த மண்ணில்
அரளிச்செடி முளைக்கிறதே
அகதிகளாய் நம்மக்கள்
அகிலமெங்கும் ஆயினரே

பொறுமைக்கும் எல்லையுண்டு
புதிருக்கும் விடையுண்டு
வறுமைக்கு எல்லையுண்டோ
நல் வாழ்வுக்கு வழியுண்டோ

முந்தையநாள் மரணஓலம்
மறையுமுன்னே மறு நிகழ்வா
முகமூடி மனிதர்களின்
முடிவுக்கிது மூலதனமா

பச்சோந்தி மனிதர்களின்
பகட்டான நடிப்பினிலே
அப் பாவிமக்கள் அழிகிறதே 
பகுத்தறிவு சாகிறதே 

சாதியில்லை பேதமில்லை
சமத்துவமே மனிதக் கொள்கை
இதை யாருரைப்பார் எவர் கேட்பார்
இத்தரணியிலொரு பிள்ளை

                                                             அதிரை மெய்சா
                          
  

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.