Monday, February 24, 2014

பார்வை !


பார்வைகள் பலரகம்
பார்க்கும் விதம் பலவிதம்
உள்ளமும் பார்த்திடும்
உறவினை நேசிக்கும்
உலகமே பார்த்திடும்
உயர்ந்து மனம் வென்றிடும்

அன்னையின் பார்வையில்
அகிலமே வாழ்ந்திடும்
தந்தையின் பார்வையே
தரணியில் புகழ் சேர்க்கும்

காமுகன் பார்வையோ
கன்னியரை மயக்கிடும்
காதலில் வீழ்ந்து தம்
வாழ்வினை சிதைத்திடும்

ஒருதலைப் பார்வையோ
ஊனத்தின் பார்வையாம்
இருதலைப் பார்ப்பதே
இதயத்தில் வாழ்ந்திடும்

மனைவியின் பார்வையில்
மகத்துவம் நிறைந்திடும்
கணவனின் பார்வையே
காலங்கள் இனித்திடும்

நல்லதைப் பார்த்திடும்
நட்பினின் பார்வையில்
நெருப்பென புகைந்திடும்
தப்பெனும் பார்வையாம்

படைத்தவன் பார்வையில்
படைத்திடும் நற்ச்செயல்
கிடைத்திடும் நிரந்தரம்
சுவனத்தின் சுக இன்பம்
அதிரை மெய்சா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.