Sunday, February 2, 2014

திருப்பம் !


மனிதனின் வாழ்வு தனில்
மகத்தான மாற்றமே
மாறி மாறி வரும் திருப்பம்


திரும்பும் திசையெல்லாம் தொடர் நிழலாய் வருமாம் திருப்பம்
தொய்வில்லா வாழ்க்கைக்கு துணை நிற்குமாம் திருப்பம்

பிறப்பும் இறப்பும் வாழ்க்கையில் பெரியதோர் திருப்பம்
பெண்ணாய் பிறப்பதும் ஆணாய் பிறப்பதும் அதிசயமானதொரு திருப்பம்

உறவுகள் பலப்பட உதவிடுமாம் திருப்பம்
உதவா மனிதனும் உன்னதனாவதும் ஒரு திருப்பம்

மனம் நொந்தவன் இனம் கண்டதும் ஒரு திருப்பம்
மானம் காத்திட மனம் யோசிப்பதும் ஒரு திருப்பம்

சினம்கொண்டு பகையானதும் ஒரு திருப்பம்
சீரிய நல் நட்புண்டானதும் ஒரு திருப்பம்

திருந்தாதவன் திருந்திடத் துணை நிற்குமாம் திருப்பம்
தீங்கிழைப்பவன் மனம் மாறுவதும் ஒரு திருப்பம்

கைபிடித்த உறவை கண்ணியமாய் நடத்துவதும் ஒரு திருப்பம்
காற்றும் மழையும் காணகத்தில் பொழிவதும் ஒரு திருப்பம்

வாழ்வினில் வந்து மறையும் நினைவுகளும் ஒரு திருப்பம்
வையகத்தில் நாம் வந்ததும் விதி செய்த ஒரு திருப்பம்

திருப்பத்தை தலைப்பிட்டு திணற வைத்ததும் ஒரு திருப்பம்
தெவிட்டாத கவி நிகழ்வில் நான் கலந்ததும் ஒரு திருப்பம்

திருப்பங்களில் பெரிய திருப்பமாய்

சகோதரி சைபாவின் இனிய குரலில் என் கவிவரிகள் ஒலிப்பதும் ஒரு திருப்பம்

சகோதரி இரா விஜய கௌரி அவர்களின் தொகுப்பின் சிறப்பும் ஒரு திருப்பம்

திருப்பங்கள் யாவும் அனைவருக்கும் நல்ல திருப்பமாய் அமைய
திரும்பித்தன் வாழ்வை பார்த்து நன்றி சொல்லும் சுகமான திருப்பமும் ஒரு திருப்பம்

அதிரை மெய்சா
குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 09-05-2014 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.