Friday, October 4, 2013

[ 3 ] ஏங்கி நின்றான்..!!! ஏக்கம் தொடர்கிறது...


கடல் கடந்த வாழ்க்கையிலே....
கை நிறைய காசு பணம்...
கணப்பொழுதில் செய்தி கேட்டு...
காற்றாய் பறந்த காசு பணம் எண்ணி....
ஏங்கி நின்றான்...!

சிறுகச்சிறுக சேர்த்த பணம்....
சிறு வணிகம் செய்யலாமென....
யோசனையில் அவனிருக்க....
பாசனையில் பெற்றோர்கள்....
பணம் கேட்கும் செய்தி கேட்டு....
ஏங்கி நின்றான்...!

வாள் பாய்ந்த வெந்த புண்ணாய்...
வேதனையில் அவன் தவிக்க....
வீண் பழிகள் சுமந்து அவனும்....
விம்மி அழுது...
ஏங்கி நின்றான்...!

கால் போன போக்கில் போனான்....
கயவர்கள் கூட்டம் கண்டு...
மனம் போன போக்கில் போனான்...
மானம் போகும் காட்சி கண்டு....
சிரம் நிமிர்ந்து சுற்றார் கண்டு....
ஆறுதல் சொல்லுக்காக....
ஏங்கி நின்றான்...!

துக்கம் அவனை தூங்க மறுக்க....
நித்தம் ஒரு நினைவு சுமந்து....
நெஞ்சம் நொந்து....
ஏங்கி நின்றான்...!

கனம் நிறைந்த மனதோடு....
குணம் நிறைந்த மனிதரைக்காண....
தேடி அலைந்தும் கிடைக்காமல்....
தேம்பி அழுது....
ஏங்கி நின்றான்...!

வீதியில் பார்த்த ஆறுயிர் நண்பன்....
மீண்டும் என்று செல்வாய் என்றான்....
ராத்திரி பார்த்த ராப்பிச்சைக்காரன்...
எப்போ செல்வீர் எஜமான் என்றான்...
வீடும் வீதியும் ....
விரட்டும் நிலை நினைத்து
ஏங்கி நின்றான்...!

அதிரை மெய்சா
ஏக்கங்கள் தொடரும்...

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.