Friday, September 20, 2013

வந்து மறையும் வருசங்கள் !


                                                      உலக மக்கள் காத்திருக்க
ஒவ்வொரு ஆண்டும் வந்து மறையும்


ஆனால் மறையாமல் நிலை கொண்ட
மற்ற பல யாவும் என்று மறையும்...???

வறுமைகள் யாவும் மறையவில்லை
வெறுமைகள் யாவும் உறங்கவில்லை

கலவரங்கள் யாவும் ஓயவில்லை
கயவர்கள் யாவும் மடியவில்லை

ஊழல்கள் யாவும் ஒழியவில்லை
ஒவ்வாதவர்கள் யாவும் அகலவில்லை

தர்மங்கள் யாவும் தழைக்கவில்லை
தவறுகள் யாவும் குறையவில்லை

நீதிகள் யாவும் நிலைக்கவில்லை
நியாயங்கள் யாவும் ஜெயிக்கவில்லை

பாலியல்கொடுமைகளுக்கு முடிவேதுமில்லை
பகற்கொள்ளையர்களுக்கு பயமேதுமில்லை

வன்செயல்கள் யாவும் கலையவில்லை
வான் மழைகள் யாவும் பொழியவில்லை

அக்கிரமங்கள் யாவும் அழியவில்லை
அனாச்சாரங்கள் யாவும் அகலவில்லை

அவலங்கள் யாவும் அயரவில்லை
அகிலங்கள் யாவும் அமைதியில்லை

ஆதிக்கம் யாவும் சாகவில்லை
அழிவுகள் யாவும் நிற்கவில்லை

மேற்சொன்ன அனைத்தும் நீங்கி
மேலோங்கி உயர்ந்து நிற்கும்
நன்னாள் தான் என்று வரும்..???
அதுவே எங்களின் புதுமை தினம்...!

அவலங்கள் மாறி மறைந்து
அகிலமெல்லாம் மகிழ்ச்சியில் மூழ்கும்
நன்னாள் தான் என்று வரும்..???
அதுவே எங்களின் புதுமை தினம்...!

சென்றபல ஆண்டு சம்பவங்கள்
செவி சாய்த்து நினைவு கூர்ந்து
இனிவரும் நாட்களை
புதுமை தினமாய் மாற்றிடுவோம்.
புகழ் மணக்கச் செய்திடுவோம்...!

அதிரை மெய்சா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.