Friday, September 20, 2013

வீடு...மனைவி...மக்கள்...!


வீதியில் உலாவந்து...
விகட கவியாய் திரிந்து...
பாடுகள் பல பட்டு...
பட்ட கஷ்டங்களின் பலனாக...
வீடு ஒன்றை உருவாக்கினான் அவன்

குலம் மகிழ கோத்திரம் தழைக்க...
துணையொன்றை ஏற்படுத்தி...
துணிவாக துணை நின்று...
சந்ததிகள் பல உருவாக்கி...
சாந்தி மனம் கொண்டு...
சாய் நாற்காலியில் அமர்ந்தான் அவன்...!

மக்களை பெற்ற மகராசனாய்...
மானிடர் மத்தியில் நன் மதிப்பாய்...
சொக்கதங்கமென பேர் சொல்லும்...
செல்வங்களை செதுக்கியெடுத்து...
துணைவியின் துயர் போக்கிடும்...
தூயவனாய் இருந்து...

வீட்டையும் அழகு படுத்தி...
மனைவியையும் மகிழவைத்து...
மக்களையும் மதிக்க வளர்த்து...
வீடும் மனைவியும் மக்களுமாய்...
வீதியில் உலாவந்து...
விகட கவியாய் இன்று,,,
காடுவரை சென்ற பின்...
கடைசி வரை யாரென்று...
கண் விழித்துப்பார்க்கிறான் அவன்...!

அதிரை மெய்சா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.