Friday, September 13, 2013

வாழ்வியல் வரம்பு !

வரம்பு ஒன்னெ எல்லெ வச்சி
வாழ நீங்க வழி வகுத்துக்குங்கோ
நல்ல குணமிருந்தா வரம்பிருக்கும்

வரம்புக்குள்ளே குடியிருக்கும்
வரம்பெ மடக்கி புடிச்சி நீங்கோ
வாழ்க்கயத்தான் தொடங்கிடுங்கோ

அஞ்சியிலெ வளயாதது
பிஞ்சியிலெ பழுக்குமுங்கோ
அடிச்சி ஓதச்சி வளக்காமெ
அணச்சி புடிச்சி ஆதரிங்க
அதுக்கு மொரு வரம்பிருந்தா
அகிலத்தையே ஆளுமுங்கோ

எதுக்குன் நல்லா ஒலச்சிடுங்கோ
தெம்பு
இருக்கும்போதே சேத்துடுங்கோ
அதுக்கு எந்த வரம்புமில்லே
அறுவடக்கிம் எல்லையில்லே

கள்ளக்காதல் வேணாம் புள்ளே
கைபுடிச்சி வாழுபுள்ளே
வரம்புக்குள்ளே கொழந்தெ பெத்து
வருமானத்தெ பெருக்கிக்கிட்டு
உருப்படியா வாழ்ந்து டுங்கோ
ஊரு வாயெ அடச்சிடுங்கோ

செத்தவனுஞ் சொக்கி நிப்பான்ஞ்
சீமெ பொண்ண கண்டுபுட்டா
வரம்ப த்தாண்டி ஆடெ அணிஞ்சி
வம்புலெ போயி மாட்டாதிங்கோ
பட்டுடல மறச்சிடுங்கோ
பாலியலுங் கொறஞ்சிடுங்கோ

சட்டப்படி குத்தமுங்கோ
வரம்பு மீறி நடந்துகிட்டா
நாட்டு சட்டமொழுங்கு கெட்டு போவுஞ்
சாதிசனம் குத்தன்ஞ்ஜொல்லும்
வெட்டிப்பேச்சி வேணாமுங்கோ
வீணா பொழுதெ கழிக்காதீங்கோ

வேஷக்கார உலகமுங்கோ
விடிவு எப்பொ பிறக்குமுங்கோ
காசுபணத்தெ கண்டுபுட்டா
காத்துலெ பறக்கும் காலமுங்கோ
அதுக்கு மொரு வரம்பிருக்கு
அதெ நெனச்சி அடங்கிடுங்கோ

எதுக்கு மொரு வரம்பு வேனும்
அதுக்குன் நல்ல மனசுவேனும்
எல்லெ ஒன்னெ போட்டுக்கிட்டு
நல்லபடி வாழ்ந்துடுங்கோ
வரம்பு ஒன்னெ வச்சிக்கிட்டு
பெரும்புகழெ தேடிடுங்கோ

அதிரை மெய்சா

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 06-06-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. இதோ அதன் காணொளி...

1 comment:

  1. நல்லதொரு கவிதை !

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.