Friday, October 4, 2013

[ 5 ] ஏங்கி நின்றான்..! ஏக்கம் தொடர்கிறது...


வகை வகையாய் நோய் சுமந்து...
வந்த நோய்க்கு மருந்துண்டு...
மன நோய்க்கு மருந்து தேடி...
மனம் குன்றி...
ஏங்கி நின்றான்...!

செவி கேட்ட சொல்லின் வலி...
செவிடாகிப் போனது நெஞ்சு...
செய்த நன்றி மறந்ததை எண்ணி...
செய்வதறியா மதி கெட்டு...
ஏங்கி நின்றான்...!

மூத்த மகன் மணம் முடிக்க...
முகத்திரையில் மகளிருக்க...
ஏக்கத்துடன் அவன் பார்த்து...
எண்ணி மனம்...
ஏங்கி நின்றான்...!

பாசத்தோடு பார்த்த மகன்...
பட்ட துன்பம் போதுமப்பா...
ஓரிரண்டு வருடத்திலே...
நல்ல வரன் தேடிப்பார்த்து...
நான் முடிப்பேன் தங்கை மணம்...
நல்ல மகன் சொன்ன வார்த்தை...
புன்னகையுடன் அவன் நினைத்து...
ஏங்கி நின்றான்...!

தட்சணைகள் பல கொடுத்து...
தங்கத்தில் பரிசளித்து...
தங்கை மணம் முடித்து வைக்க...
கட்சியின் கரை வேட்டிகள்...
கணப்பொழுதில் வந்திறங்கி...
கை கொடுத்து கட்டித் தழுவ...
அன்பு மகள் மணம் முடித்த...
அந்த நல்ல மணாளனும்...
அரசியல் கட்சியில் இருப்பதறிந்து...
அடி வயிரே கலங்கி அவனும்...
ஏங்கி நின்றான்...!

அரசியலே வேண்டாமென...
ஆரம்பம் முதல் ஒதுங்கி வர...
தன் வீட்டிலும் அரசியல் புகுந்து...
தங்களை பிரிந்திடுமோ என்றெண்ணி...
ஏங்கி நின்றான்...!

கட்சிகள் என்று பல இருந்தும்...
கட்டித்தழுவ ஆளிருந்தும்...
தொட்டுக்கொண்டால் ஒட்டிக்கொள்ளும்...
தூரமாய் விலகியே...
ஏங்கி நின்றான்...!
ஏக்கங்கள் தொடரும்...
அதிரை மெய்சா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.