Saturday, February 21, 2015

ஏனிந்த காதலர் தினம் !?

காதலர்க்கு ஓர் தினம்
இது காமுகர்க்கு அடைக்கலம்
மாந்தர்களை அழித்திடும்
மானத்தைப் பறித்திடும்

காதலைக் காதலிப்போர்
கண்ணியத்தைப் பேணிடுவர்
காமத்தைக் காதலிப்போர்
கலங்க வைத்து மகிழ்ந்திடுவர்

உண்மையான காதலென்றும்
உள்ளமதில் நிலைகொள்ளும்
உடல்கொண்ட காதலன்றோ
ஊனமாகி மடிந்து விடும்

எல்லார்க்கும் தினம் உண்டு
அதில்- ஏதாச்சும் நலமுண்டு
அந்நாளை மனதில் கொண்டு
ஆங்காங்கே நினைப்பதுண்டு

இல்லாத ஓர் நிகழ்வை
இணைக்காதே வாழ்வோடு
இனிதாக வாழ்நாளை
வளமாக்கு நம் உறவோடு

முன்னோர்கள் வாழ்வினிலே
முகம் சுழித்த காரியங்கள்
இன்னோர்கள் வாழ்வினிலோ
இனித்திடும் தேன்துளிகள்

காதலைப் போற்றுவது
காதலிப்போர் மனவிருப்பு
களங்கப்படுத்திக் காட்டுவது
கயவர்கள் வீராப்பு

இறுதியாய் இருவரிகள்

உண்மைக்காதல் ஒருபோதும்
விழாவாக வீதிக்கு வராது

இன்னுமொன்று சொல்வதானால்

உள்ளன்பில் உதிக்கும் காதல்
உலகை விட்டு மறையாது
அதிரை மெய்சா

1 comment:

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.