Tuesday, September 17, 2013

மனைவி

மனித வாழ்வில்
மகத்தான பங்கு பெரும்
மாபெரும் நாயகியாம்
வையகம் போற்றும்
நற்தலைவியாம் அவளே

குடும்பத்தலைவியாய்
வாழ்க்கைத்துணைவியாய்
வளம் வரும்
துணைவி யெனும்
மனைவி

சோதனைகள் பல கடந்து
சாதனையாய் மழலையீன்று
சபித்தோரும் போற்றிப்புகழ
சன்னதிகள் பல காண
வந்தவளே
துணைவி யெனும்
மனைவி

காலத்தால் அழியாத
காவியங்கள் பல படைத்து
பாசத்தால் பணிவிடைகள்
பாவாங்கு பல செய்து
பார் புகழ வாழ்ந்து காட்டும்
பகட்டில்லா புனிதவளே
துணைவி யெனும்
மனைவி

நேசத்தில் கரம் நீட்டி
நெகிழ்வுடனே குடில் நடத்தி
பெண்மைக்கு நற்ப்பேரு சேர்த்து
பேதமைக்கு திரையிட்டு
பகையோரும் சேர்ந்து போற்றும்
பறைசாற்ற வந்தவளே
துணைவி யெனும்
மனைவி

துன்பத்தில் துயர்துடைக்கும்
தூய உளம் கொண்ட உறவாய்
இன்பத்தில் இணை துணையாய்
ஈடில்லா சுகம் தருபவளே
துணைவி யெனும்
மனைவி

வீடு முதல் காடுவரை
வீறுகொண்டு வீற்றிருக்கும்
நாடு போற்றும் நல்லுறவாய்
நன்மைகள் பயக்கும்
அவ்வுறவே துணைவியெனும்
மனைவி

ஏழுறவும் எட்டி நிற்க்க
ஏற்றமிகு உறவாய் வந்து
இன்பங்கள் பெருக்கிட்டு
இல்லாளன் இதயத்தில்
இல்வாழ்வு முடியும் வரை
என்றென்றும் ஒன்றிணைந்து
ஓங்கி வளரும் உறவவளே
துணைவி யெனும்
மனைவி

மனைவியெனும் ஸ்தானத்தை
மதிப்புடனே நாம் நடத்தி
மாபெரும் வெற்றி கண்டு
மகிழ்வுடனே வாழ்ந்திடுவோம்
இன்பமுடன் வாழ்ந்திட்டு
ஈருலகை வென்றிடுவோம்

அதிரை மெய்சா

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 30-05-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.