Saturday, April 21, 2018

நெஞ்சு பொறுக்குதில்லையே ஆஷிஃபா. !!!




நெஞ்சு பொறுக்குதில்லையே
இப்பிஞ்சுக் குழந்தைக்கு நிகழ்ந்த
வன்கொடுமையை நினைக்கையில்
நெஞ்சு பொறுக்குதில்லையே


மனித உருகொண்ட
கொடிய மிருகங்களின்
கோரப்பிடியில்-சிக்கி நீ
எப்படியெல்லாம் சிதைபட்டாயோ
நினைக்கையில்
நெஞ்சுபொறுக்குதில்லையே

ஆஷிஃபா பெயர் கொண்ட
பெண்பிள்ளை
என் வீட்டிலும் உண்டு
அனுதினமும் அன்பாய்
கூப்பிட்டவன் குரல்
அதிர்ச்சியில் உறைந்து போய் 
தளுதளுக்கிறது இன்று

காஷ்மீரத்து காடுகளில்
சுதந்திரமாய்ச் சுற்றித்திரிந்த
உனக்கு - அங்கு
காட்டுமிராண்டிகள் வசிப்பது
கண்ணுக்குத்தெரியாமல் போனதே

பச்சிளம் குழந்தையை
உச்சி முகர்ந்து
பிஞ்சுக்கரத்தினை அள்ளியணைத்து
துள்ளி விளையாடுவதை
பார்த்து ரசிக்கத்தானே
மனம் வரும்

உனை படுக்கையில் கிடத்தி
பால்வடியும் உன்னுடலை
பலகண்களும் விருந்தாக்கி
பாழ்படுத்திப்பார்க்க
பாவிகளுக்கு
எப்படித்தான் மனம் வந்ததோ     

உனக்கு நீதி கிடைத்திட வேண்டும் 
உனைத் தீண்டிய கும்பலை
தோண்டிப் புதைத்திட வேண்டும்
தீ வைத்துக் கொளுத்தி 
தீக்கிரையாக்கிட வேண்டும் 
அத்தனை தண்டனைகளையும்
அனுபவிக்கக் கொடுத்து
அணுஅணுவாய்க் கொல்லப்பட வேண்டும்

இனியொரு குழந்தைக்கு
இக்கொடுமை நடக்காதிருக்க
இக்கொடிய கும்பலுக்கு
கொடுக்கும் தண்டனை
பாடமாக இருக்கவேண்டும்

JUSTICE FOR ASIFA

                                                               அதிரை மெய்சா
                                                 

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.