Sunday, April 19, 2015

மனசாட்சி !

உள்ளமதில் நிலைகொண்டு
உண்மைதனை உரக்கச்சொல்லி
மனிதநேயம் மாறிடாது
மனதினுள்ளே ஒரு சாட்சியாய்
மதிசெய்திடுமோர் ஆட்சியாம்


கண்காணா தவறுகளை - இனம்
காண்பது  மனதன்றோ
கல்நெஞ்ச மனம்கூட
கரைந்திடுமே  மனசாட்சியாலே

ஆயிரம் சாட்சி வந்தாலும்
அகத்தில் உறுதியாய் மனசாட்சி
ஆறறிவு மனிதனுக்கு
ஆழ்மனதை ஆளும் கட்சி

பொய்சாட்சி சொல்வோர்க்கும்
பொல்லாங்கு செய்வோர்க்கும்
மனசாட்சி மட்டும் போதும்
மனம் திருந்த நல்ல தருணம்

எண்ணிலடங்கா சம்பவங்கள்
இவ்வுலகில் அனுதினமும்
அத்தனைக்கும் அடித்தளமே
அதன் தீர்வு மன சாட்சியிலே

இறைசாட்சி முதல் சாட்சி
இருக்கணும் அங்கு நிலைநிறுத்தி
மறையோனை தொழுதிடவும்
வேணுமங்கு மனசாட்சி

மனசாட்சி மறந்து போனால்
மனிதனவன் மிருகமாவான்
மறவாத மனமிருந்தால்
மகிழ்வுகளை வாரியணைபான்

மனசாட்சி இல்லாதோர்
மனித இனம் அல்லாதோர்
மனதினிலே இரக்கமுள்ளோர்
புனிதரான மனிதராவர்

அதிரை மெய்சா

2 comments:

  1. திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டும் வரிகள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் வருகைக்கும் கருத்து பதிந்தமைக்கும் மிக்க நன்றி.

      Delete

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.