Monday, April 21, 2014

தேர்தல் !


ஒவ்வொரு தேர்தலிலும்
வெவ்வேறு கூட்டணிகள்
ஒவ்வாதோர் ஒன்றிணைந்து
உருவாக்கும் நாடகங்கள்

திரும்பும் திசைகளெங்கும்
தேர்தல் பிரச்சார சப்தம்
திகட்டுமளவு அனுதினமும்
வாக்குறுதிகள் நித்தம்

களப்பணியில் மூழ்கிடும்
தொண்டர்கள் கூட்டம்
காய்ந்த வயிற்ருடன் கிடக்கும்
அத் தொண்டனின் குடும்பம்

ஆணவங்கள் கொண்டவரும்
அடங்கி வந்து பிரச்சாரம் செய்வர்
ஆசைகளை உள்ளடக்கி
ஆட்சியமைக்க காத்திருப்பர்

மானங்கள் போனபோதும்
மாற்றுக்கட்சி நகைத்தபோதும்
தானங்கள் பலவழங்கி
தன்னிலையை உயர்த்திக்கொள்வர்

மக்களாட்சி மலருமென
மனமுறுக வாக்குரைப்பர்
வந்தமர்ந்த மறுகணமே
சிந்தையைவிட்டு மறந்துபோவர்

எக்கட்சி எதிர்த்து நின்றும்
ஏகமாய் நம்பியிருப்பார்
இறுதியில் முடிவுகேட்டு
ஏமாறுவர் பாமர மக்கள்

இனியதனை வீழ்த்திடவே
இதிகாசம் படைத்திடவே

நலிந்தோரின் துயர்துடைக்க
நாட்டில் ஒழுங்கை சீர்படுத்த
நல்லாட்சி அமைந்துடவே
நாட்டுமக்கள் ஒன்றிணைந்து

தேர்தலெனும் சந்தையிலே
தேர்ந்து விலைபோய்விடாமல்
சிந்தையிலே உதிக்கும் நல்ல
சிறந்தோர்க்கு வாக்களிப்போம்
அதிரை மெய்சா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.