Wednesday, December 11, 2013

தலையெழுத்து !


தமிழுக்கு அகரம் தலையெழுத்து
தாய்மையை போற்றிடும்
அன்னைக்கும் அது முதலெழுத்து

முடிவுக்கு பின்னால் விதி என்பர்
முடிவுற முன்னால் தலையெழுத்தென்பர்

புகழில் போற்றப்படுபவை தலையெழுத்தல்ல
இகழ்வில் தூற்றப்படுவதே தலையெழுத்தாகும்

வகைவகையாய் எழுத்திருந்தும்
வகைபடுத்த முடியா வடிவம் பெறும்

உயிரெழுத்து உறங்கியினும்
உயிர்த்தெழுந்து உற்று நோக்கும்

குடிலுடைக்கும் எழுத்துயிது
மதி நிறைந்து கிடக்கிறது

நேசிக்க உறவிருந்தால்
நெஞ்சினில் நிம்மதி தரும்
யாசிக்க யாருமில்லையெனில்
அதுவே அங்கு தலையெழுத்தாகும்

அன்பிற்கும் மூன்றெழுத்து
பண்பிற்கும் மூன்றெழுத்து
பாசத்திற்கும் மூன்றெழுத்து
நேசத்திற்கும் மூன்றெழுத்து
உண்மைக்கும் மூன்றெழுத்து
உறவுக்கும் மூன்றெழுத்து
உயிருக்கும் மூன்றெழுத்து
உயிர் நட்புக்கும் மூன்றெழுத்து
இன்னும் எத்தனை எத்தனையோ
இன்ப வார்த்தைகள்
இம் மூன்றெழுத்து முடிவெழுத்தில்

இதில் யாவும்
மெய்ப்பட வில்லையெனில்
மேன்மையாய் நிற்க்குமிந்தத் தலையெழுத்து

அதிரை மெய்சா

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 21-11-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.