tag:blogger.com,1999:blog-52995618219121047112024-03-13T10:19:27.183+04:00அதிரை மெய்சா'வின் விழிப்புணர்வு கவிதைகள், கட்டுரைகள் அதிரை.மெய்சாhttp://www.blogger.com/profile/07191876547261572485noreply@blogger.comBlogger201125tag:blogger.com,1999:blog-5299561821912104711.post-63867834671684522112018-07-20T05:44:00.002+04:002018-07-20T06:00:07.243+04:00இளைஞர்களே சற்று சிந்திப்பீர்களா.!?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
மரணம் என்பது யாரும் மறுக்க முடியாதது.யாராலும் தடுக்கவும் முடியாது.அது ஒருநாள் நம்மை நிச்சயம் வந்தே தீரும். அதற்காக மரணத்தை நாம் தேடிப் போகக்கூடாது.இயற்க்கை மரணம் என்பது எல்லோருக்கு மானவை.ஆதலால் பெற்றோர்களும் மற்றோர்களும் எளிதில் ஆறுதல் அடைந்து விடலாம்.<br />
<a name='more'></a>ஆனால் அகால மரணம்,விபத்துக்களில் ஏற்படும் மரணம் அதுவும் இளமைப்பருவத்தில் ஏற்படும் மரணத்தை எந்தப் பெற்றோர்களாலும் அவ்வளவு எளிதாக ஜீரணிக்க முடியாது.<br />
<br />
வாகன விபத்துக்களிலும் சாலை விபத்துக்களிலும் இறப்பை சந்திக்கும்
இளைஞர்களின் பெற்றோர்களுக்கு அதைவிட துயர் நிகழ்வு வாழ்க்கையில் வேறு
எதுவும் இருக்க முடியாது.<br />
<br />
<div class="text_exposed_show">
பெத்து
வளர்த்து படிக்க வைத்து பாசம்காட்டி வாலிபம் வரை ஆளாக்கி தனது பிள்ளையின்
எதிர்காலம் குறித்து எத்தனையோ கனவுகளுடன் வாழ்ந்துவரும் பெற்றோர்கள்
திடீரென தனது பிள்ளையை சொற்ப்ப ஆயுளில் பறிகொடுத்தால் அதுவும் கோர
விபத்துக்களில் பறிகொடுத்தால் அவர்களால் அவ்வளவு எளிதில் அந்த துயர்
நிகழ்வை மறந்துவிட முடியாது. காலத்திற்க்கும் மனதில் நீங்காத ரணமாகத்தான்
இருக்கும்.அது ஈடு செய்யமுடியாத பேரிழப்பு.<br />
<br />
அதைப்பார்க்கும்
குடும்பத்தினருக்கும் கூடப்பிறந்தவர்களுக்கும் உறவினர்களுக்கும்
நண்பர்களுக்கும் நிம்மதி இருக்காது.நமது சிறிய கவனக்குறைவு நமக்கு
எமனாவதுடன் எல்லோரையும் நிம்மதியிழக்கச்செய்துவிடும்.<br />
<br />
இதை மனதில்
கொண்டு ஒவ்வொரு இளைஞர்களும் வாகன ஓட்டுநர்களும் நமது விலைமதிப்பிட முடியாத
உயிரை காக்க நமது குடும்பம் கவலையின்றி நிம்மதியுடன் இருக்க கவனம்
தேவை.வாகனம் ஓட்டுபோதும் சாலையில் நடக்கும் போதும்,கடக்கும்போதும் கவனம்
அவசியம் தேவை. ஒவ்வொருவரும் சாலை விதிமுறைகளை சரியாக கடைபிடித்து
விழிப்புணர்வுடன் நடந்தால் விபத்துக்களையும் அதனால் ஏற்படும்
உயிரிழப்புக்களையும் தவிர்த்துக்கொள்ளலாம்.<br />
<br />
<br />
<span style="color: red;"><b>அதிரை மெய்சா</b></span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDQcNSsvOOSO-unIgBBGUTIyfLtR73c7O9A4kWtrSLW4OwAJVsST3HnxOQgj6h6DvZtd5XGihiRH1RrXnGt6xskZMmKotLd5eYH6iUzm_5wMV9ObyN1QYP_S0s7GHJMoRAZ6e17YIONQ4/s1600/line+shirt+photo.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="390" data-original-width="333" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDQcNSsvOOSO-unIgBBGUTIyfLtR73c7O9A4kWtrSLW4OwAJVsST3HnxOQgj6h6DvZtd5XGihiRH1RrXnGt6xskZMmKotLd5eYH6iUzm_5wMV9ObyN1QYP_S0s7GHJMoRAZ6e17YIONQ4/s200/line+shirt+photo.jpg" width="170" /></a></div>
</div>
</div>
அதிரை.மெய்சாhttp://www.blogger.com/profile/07191876547261572485noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5299561821912104711.post-37815885824283436222018-07-07T07:33:00.001+04:002018-07-07T07:39:53.726+04:00மனிதன் மாறிவிட்டான்.!?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
காலங்கள் கடந்து செல்லச்செல்ல மனிதனின் மனம் கொஞ்சம்கொஞ்சமாக தனது வழியிலிருந்து மாறத்தொடங்கி விட்டது. மனிதன் மாறி விட்டான். <br />
<a name='more'></a>சொல்,செயல்,நடவடிக்கை,நாகரீகம்,பழக்க வழக்கமென அனைத்திலும் மாற்றம் ஏற்பட்டு விட்டது. சுயநலம் பெருத்துவிட்டது. அநீதியின் கை ஓங்கிவிட்டது.ஆங்காங்கே கலவரம்,கொலை,கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றச்செயல் கணக்கில்லாமல் அரங்கேறி வருகிறது.<br />
<br />
மனிதன் மாறியதற்கான சான்று இது ஒருபுறமிருக்க .......அடுத்து பார்ப்போமேயானால் ...... <br />
<br />
இயற்க்கை அழிந்து கொண்டிருக்கிறது.பெருநோய்கள் சர்வசாதாரணமாக வரத்தொடங்கி விட்டது.மனிதனின் ஆயுட்காலம் குறைந்து கொண்டிருக்கிறது.பூமியில் நீர்ச்சத்து இல்லாமல் போய்விட்டது. உணவில் தரம் குறைந்து விட்டது.விவசாய பூமியெல்லாம் வீடுவாசலும் பலஅடுக்குக் கட்டிடமுமாகி விட்டது.காற்றும் கூட மாசுபட்டு விட்டது.சுற்றுச் சூழல் பாழாகிவிட்டது. உண்பவையிலிருந்து உடுத்தும்பொருள்வரை கலப்படமாகி விட்டது. அறிவூட்டும் கல்வியும் உயிர்காக்கும் மருத்துவமும் வியாபாரமாகி விட்டது.ஊழல் பெருத்து விட்டது.மனித உயிர்கள் மலிவாகிவிட்டது. <br />
<br />
இதெற்க்கெல்லாம் காரணம் யார் .??? மனிதன் ...<br />
மனிதனது சுயநலப்போக்கு ...அப்படியானால் மனிதன் மாறிவிட்டான்.<br />
அழிவை நெருங்கிவிட்டான் என்றுதான் சொல்லமுடியும்.<br />
<br />
ஒன்றைமட்டும் இம்மனிதன் நன்கு உணர்ந்து விட்டால் அனைத்திற்கும் தீர்வு கண்டு விடலாம்.அதாவது.... <br />
<br />
இந்த உலகம் இந்த வாழ்க்கை யாருக்கும் நிலையானது அல்ல.ஒவ்வொரு நொடிப்பொழுதும் மரணத்தை எதிர்நோக்கித்தான் இவ்வுலகில் நாம் வாழ்ந்து வருகிறோம். மரணம் ஒருநாள் நம்மை வந்து அடைந்தே தீரும்.அதில் எந்த மாற்றுக கருத்தும் இல்லை.அதை யாராலும் தடுக்க முடியாது.<br />
<br />
நம்மிடத்தில் எத்தனை கோடி செல்வம் இருந்தாலும் எத்தனைதான் பாதுகாப்பு
இருந்தாலும் யாராலும் மரணத்திலிருந்து நம்மை மீட்டுவிட முடியாது.
மரணித்தபின் இவ்வுலகிலிருந்து நாம் சேமித்த எதையும் எடுத்துச் செல்ல
முடியாது.நம்மோடு சேர்ந்து நம் சொந்தபந்தம் யாரும் வரப்போவதில்லை. <br />
<br />
அதற்குமுன் இவ்வுலக வாழ்க்கையில் நமக்கான இறுதிநாள் வருமுன் நாலு பேருக்கு நன்மை செய்து மரணத்திற்குப் பிறகும் நாம் ஒவ்வொருவரின் மனதில் வாழ்பவராக நல்லது செய்து புண்ணியத்தை தேடிக்கொள்ள வேண்டும்.<br />
<br />
இப்படியான எண்ணங்கள் நம் ஒவ்வொருவரின் மனதிற்குள் வந்துவிட்டால் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும். இவ்வுலகம் அமைதி பெரும்.<br />
<span style="color: #b45f06;">அதிரை மெய்சா</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3BE6O_9GWC1_ggwnh6qWcM4rZXMLlvNGStVVaLfDrgj36MI2KFeKUyIv8HnOaz0AFD6EfFecsn9KTMxYvexg_swAz_FAvPy5BRNiVGXxJi1B8WnZaGWz0MqJ0_5eq1SxwOuT8gZJzCyU/s1600/line+shirt+photo.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="390" data-original-width="333" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3BE6O_9GWC1_ggwnh6qWcM4rZXMLlvNGStVVaLfDrgj36MI2KFeKUyIv8HnOaz0AFD6EfFecsn9KTMxYvexg_swAz_FAvPy5BRNiVGXxJi1B8WnZaGWz0MqJ0_5eq1SxwOuT8gZJzCyU/s200/line+shirt+photo.jpg" width="170" /></a></div>
<br /></div>
அதிரை.மெய்சாhttp://www.blogger.com/profile/07191876547261572485noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5299561821912104711.post-34358383937977462272018-06-23T07:33:00.001+04:002018-06-23T11:58:08.355+04:00தந்தை.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
விந்தையிலும் விந்தை <br />
தந்தையே<br />
<br />
நம் உடலின் <br />
ஒவ்வொரு உயிரணுவும் <br />
தந்தைக்குச் சொந்தமானதே<br />
<a name='more'></a><br />
<br />
தந்தை நம் <br />
உயிரோடு கலந்த உறவு <br />
ஒவ்வொரு நொடித்துளியும்<br />
நினைவில் கொள்ள <br />
வேண்டிய உறவு<br />
<br />
தந்தை சொல்மிக்க <br />
மந்திரமில்லை <br />
தந்தைக்கு நிகர் <br />
யாருமில்லை<br />
<br />
தலைக்குமேல் வளர்ந்ததும் <br />
தோழனாய் <br />
தன்னிலை உணர்த்திடும்<br />
ஆசானாய் <br />
விதைத்து உருவாக்கிய<br />
வித்தகனாய்<br />
விலாசம் கொடுத்திட்ட<br />
உத்தமனாய்<br />
<br />
சகலமும் நமக்களித்த<br />
வல்லவனாய் <br />
இவ் வையகம்போற்றிடும்<br />
குடும்பத்தலைவனாய்<br />
தாய்க்குமட்டுமல்ல <br />
தன் வாரிசுக்கும்<br />
துணைவனாய் <br />
இப்படி அனைத்திற்கும் <br />
சொந்தக்காரனே<br />
தந்தை <br />
<br />
தந்தைப் பாசம்<br />
கண்ணுக்குத் தெரியாது<br />
அது கண்டிப்பு நிறைந்தது <br />
<br />
பாசத்தை மனதிற்குள் <br />
வைத்து<br />
பார்ப்பதற்கு வில்லனாய்த்<br />
தோன்றி <br />
மழலைப் பருவத்தில்<br />
மட்டுமல்ல <br />
வாழ்வின் மொத்த பருவத்திலும்<br />
நம்மை மனதில் சுமக்கும் <br />
புரிந்து கொள்ளமுடியாத <br />
பொக்கிஷம்<br />
<br />
அதிரை மெய்சா<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNpSRYXISATGQ-vWdmQd2nUGsrvsB6vLvJaBfsS3HWgM4ZVZOmPfrxg9MB1XRbmLAbNnhhfz9GwXKOCoHyCwWb2s0U9Ezluc7h_VOudE-5pE3MxfOxIopkh17LVKgUTOtrC6nSQDipLBk/s1600/line+shirt+photo.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="390" data-original-width="333" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNpSRYXISATGQ-vWdmQd2nUGsrvsB6vLvJaBfsS3HWgM4ZVZOmPfrxg9MB1XRbmLAbNnhhfz9GwXKOCoHyCwWb2s0U9Ezluc7h_VOudE-5pE3MxfOxIopkh17LVKgUTOtrC6nSQDipLBk/s200/line+shirt+photo.jpg" width="170" /></a></div>
</div>
அதிரை.மெய்சாhttp://www.blogger.com/profile/07191876547261572485noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5299561821912104711.post-86302828715684762432018-06-19T06:57:00.003+04:002018-06-20T07:01:40.452+04:00இலவசம் இலவசம்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
ஒன்று வாங்கினால் <br />
ஒன்று இலவசம்<br />
அறியாதவன் கண்ணுக்கு <br />
ஆனந்தம் பெருமிதம்<br />
<a name='more'></a><br />
<br />
இலவசப் போர்வையில்<br />
இயங்குது தொழில்துறை <br />
பரவசப் பார்வையில்<br />
பாமரர் மனநிலை<br />
<br />
பகட்டு விளம்பரத்தில்<br />
பெருத்த விற்பனை<br />
கொடுத்த பணத்திற்கு <br />
பொருட்களோ பாதிப் பை<br />
<br />
தரத்தை சோதிக்க <br />
இலவசம் கண்மறைக்க<br />
தரமில்லா வியாபாரம் <br />
தரணியெங்கும் பெருகியதோ<br />
<br />
உள்ளூர் கடைகள் <br />
உறங்கி கிடக்க<br />
ஊர்தாண்டிச் சென்று நாம் <br />
பணத்தை இரைக்க<br />
<br />
போலிகளின் படையெடுப்பு<br />
போர்க்குவியலாய் ஆகியதே<br />
இவையனைத்தும் இலவசத்தால்<br />
இன்னும் விற்பனை ஆகிறதே <br />
<br />
இலவசம் என்றதாலே <br />
அதன் வசம் ஆகினரே<br />
அவசியமற்றதை <br />
அள்ளிக் குமித்து <br />
கடன்காரர் ஆகினரே <br />
<br />
எல்லாமே மோகம்தான்<br />
வியாபார நோக்கம்தான் <br />
இலவசமாய் யார் தருவார்<br />
எம்மக்கள் என்றுணர்வர்<br />
<br />
அதிரை மெய்சா<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhndRQUAh9ZgrWkyPUJfc77v76GywaOnMxJZQPp49xwbnvCpJiis3WShLmQkHUWxgVOGD7H6kXoZVQnP7fx82eSBeWK9jjIyxiHDWLw-VC40YVWNXzZC7l958nRpW80GRLG1fnQ-x6Wt_Y/s1600/line+shirt+photo.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="390" data-original-width="333" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhndRQUAh9ZgrWkyPUJfc77v76GywaOnMxJZQPp49xwbnvCpJiis3WShLmQkHUWxgVOGD7H6kXoZVQnP7fx82eSBeWK9jjIyxiHDWLw-VC40YVWNXzZC7l958nRpW80GRLG1fnQ-x6Wt_Y/s200/line+shirt+photo.jpg" width="170" /></a></div>
<br />
<br />
<br />
<br /></div>
அதிரை.மெய்சாhttp://www.blogger.com/profile/07191876547261572485noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5299561821912104711.post-22270688792309197502018-06-05T18:05:00.000+04:002018-06-06T07:37:45.898+04:00திருட்டு உலகமுங்க...!!! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
திருட்டுத்தனம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் எந்தவகைத் திருடர்களாக இருந்தாலும் அவர்களைப் பார்த்து திருடன் என்று சொல்வதுதான் நடைமுறை வழக்கம்.திருடன் என்கிற வார்த்தை பொதுவாக நாம் உபயோகப்படுத்தும் பன்மை அற்த்தம்கொண்ட சொல்லாகும். அதாவது நமக்குத் தெரிந்து கொள்ளையடிப்பவன், குழந்தை கடத்துபவன்,வழிப்பறி செய்பவன், ஏமாற்றுபவன், மோசடிக்காரன், பொய்சொல்பவன் இப்படி பலவகையில் மனிதனுக்கு நஷ்டத்தை தீங்கை விளைவிக்கும் காரியங்களை செய்யக்கூடியவர்களை திருடன், திருட்டுப் பயல் என்று அழைப்பார்கள். <br />
<a name='more'></a><br />
மேற்குறிப்பிட்ட திருடர்கள் அனைவரும் வறுமைக்குத் திருடும் அன்றாடத்திருடர்கள். ஆனால் தற்போது இந்தப்பட்டியல் நீண்டு வேறுவகை திருடர்கள் அதிகமாக உருவாக்கிக் கொண்டிருப்பதுதான் வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது.<br />
<br />
அதாவது தற்போது கௌரவத் திருடர்கள் பெருத்துவிட்டார்கள்.இந்தவகைத் திருடர்கள்தான் மிகவும் ஆபத்தானவர்கள்.நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் நசுக்கி பெருஅழிவை உண்டுபண்ணுபவர்கள். இவர்களுக்கு மனிதாபிமானம் நாட்டுப்பற்று மக்களை பற்றிய சிந்தனை கவலை ஏதும் மனதில் இருக்காது. பணத்தின்மேல் மட்டும் மோகம் கொண்டவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருத்துக் கொண்டிருப்பதால்தான் நாட்டில் நடக்கும் இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கிறது.<br />
<br />
ஊழல் செய்வதும் ஒருவகையில் திருட்டுதான். மக்களை ஏமாற்றும் விதமாக அரசியல் செய்வதும் திருட்டைத்தான் குறிக்கும்.அதுபோல தனது சுயநலத்திற்காக இயற்கையையும் பசுமையையும் அழிப்பதும் மாசுபடவைக்கும் தொழிற்ச்சாலைகளும்,தயாரிப்பு நிறுவனங்களும் மக்கள் வசிப்பிடத்தில் அமைத்து தீமையை விளைவிக்கும் சுற்றுப்புற சூழலை பாதிக்கவைக்கும் செயலும் ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் ஒருவகையில் இதுவும் பணத்திற்காக செய்யப்படும் திருட்டு இனத்தையே சாரும். <br />
<br />
மேலும் இந்தப்பட்டியலில் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆதாயம் தேடுபவர்களும் சமயம்பார்த்து மக்கள் சேவகர்களாக தன்னை மாற்றிக் கொள்பவர்களும் ஒருவகை திருடர்களேயாவார்கள்.இத்தகைய திருட்டுக்கு அப்பாவி மக்களே பலிக்கடாவாக ஆகின்றனர். அப்பாவி மக்களுக்கு எதை நம்புவது எது நல்லது எது கேட்டது யார் நல்லவர்கள் என்பது புரியாத புதிராக போய்விட்டது. இவரா இந்த தப்பை செய்தார் நல்லவர்போல் நம்மிடம் பழகினாரே இவரா இப்படியான செயலைச் செய்தார் நம்ப முடியவில்லையே என ஆச்சரியப்படும்படியான மனிதர்கள் மத்தியில் நாம் வாழ்ந்து வருகிறோம்.<br />
<br />
அடுத்து ஆன்மீகவாதிகளிலும் பல திருடர்கள் பெருத்துவிட்டார்கள். சுவையான சொல்லில் மக்களை மயக்கமடையச் செய்து நம்பமுடியாத ஜீரணிக்கமுடியாத பல செயல்களை செய்து வருகிறார்கள். யாரைத்தான் நம்புவது என்ற குழப்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி தான் எவ்வித கவலையுமில்லாமல் பெரிய மனிதர்கள் என்கிற போர்வையில் சுகபோகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களை திருடர்கள் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது.? இப்படி தற்காலத்தில் திருட்டுத்தனம் பல உருவங்களில் நடமாடிக் கொண்டிருக்கிறது. <br />
<br />
ஆகவே மக்களாகிய நாம்தான் இனியும் உறங்கிக்கிடக்காமல்அரசியல் திருடர்களையும்,ஆன்மீகத்திருடர்களையும்,மக்கள் விரோதத் திருடர்களையும் சரியாக அடையாளம்கண்டு தக்க பாடம் கற்ப்பிக்கவேண்டும். இவர்கள் யூகிக்கும் தவறான பாதையைநம்பி நாமும் சேர்ந்து பயணிக்காமல் அடியெடுத்துவைக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் விழிப்புணர்வுடன் நடந்து இனிவரும் காலங்களில் இத்தகைய திருடர்கள் பெருகாமல் பாதுகாத்துக் கொள்வோமாக.! <br />
<br />
அதிரை மெய்சா<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNbxr2EbIuiNRqdgIdBAL9BTpb2VKaV4SThMRnOglud9hI0KJbECe5fw2Cs7uFIt-Z0MK4AHuPxZ05HYISTTo5UUi7ywxSTGG5vaAvaL5DlAh-0fU0dobqleWc72M69NhgQFScvRqbgkM/s1600/line+shirt+photo.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="390" data-original-width="333" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNbxr2EbIuiNRqdgIdBAL9BTpb2VKaV4SThMRnOglud9hI0KJbECe5fw2Cs7uFIt-Z0MK4AHuPxZ05HYISTTo5UUi7ywxSTGG5vaAvaL5DlAh-0fU0dobqleWc72M69NhgQFScvRqbgkM/s200/line+shirt+photo.jpg" width="170" /></a></div>
<br />
<br />
<br /></div>
அதிரை.மெய்சாhttp://www.blogger.com/profile/07191876547261572485noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5299561821912104711.post-49931220403372065412018-05-23T07:03:00.000+04:002018-05-24T07:15:05.254+04:00நோன்புக் கஞ்சி.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நோன்பு மாதம் ஆரம்பம் <br />
நோன்புக் கஞ்சி தாராளம்<br />
<a name='more'></a><br />
<br />
எங்கும் மணத்திடும்<br />
நோன்புக் கஞ்சி <br />
எல்லோர்க்கும் உகந்திடும் <br />
உணவுக் கஞ்சி<br />
<br />
ஏழையும் செல்வந்தரும்<br />
விரும்பும் கஞ்சி<br />
ஏற்றமான நல்லுணவு<br />
இக்கஞ்சி<br />
<br />
உடலுக்கும் குடலுக்கும் <br />
ஏற்ற கஞ்சி<br />
ஒப்பில்லா குணம் கொண்ட <br />
நற்க்கஞ்சி <br />
<br />
மருத்துவமும் பரிந்துரைக்கும் <br />
இக் கஞ்சி <br />
மகத்துவம் மிக்கது<br />
இந் நோன்புக் கஞ்சி<br />
<br />
அகிலமெங்கும் இம்மாதம் <br />
கிடைக்கும் கஞ்சி<br />
அனைவருமே ருசித்து புசிக்கும்<br />
அருமைக் கஞ்சி <br />
<br />
<br />
வயிறை நிறைத்து வலிமை தந்திடும்<br />
மனதை நிறைத்து மகிழ்வைக் கொடுத்திடும்<br />
<br />
நோவினை நீக்கி நாவினில் நின்றிடும் <br />
நோவாமல் உள்சென்று நோன்புப்பசி போக்கிடும் <br />
<br />
இக் கஞ்சியின் மகிமை அறிந்தோர்<br />
காலமெல்லாம் நோன்பு நோட்பர் <br />
இறைவனுக்கு நன்றி சொல்லி<br />
ஈடில்லா அருள் பெறுவர் <br />
<br />
<span style="color: #b45f06;">அதிரை மெய்சா</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg82EVxRePkoZS6ANDmXLOF_kxb94AVKzymyONpxp1DlAOUI9MHCME_fGSlLywVw5fSpuRlhV7-zn4j_l7gMAzPI2H93CPFc_SIg1Ld3Wl2AsJOzU5YCgMl8fwGy3J64edXzLWixje3n7Y/s1600/line+shirt+photo.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="390" data-original-width="333" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg82EVxRePkoZS6ANDmXLOF_kxb94AVKzymyONpxp1DlAOUI9MHCME_fGSlLywVw5fSpuRlhV7-zn4j_l7gMAzPI2H93CPFc_SIg1Ld3Wl2AsJOzU5YCgMl8fwGy3J64edXzLWixje3n7Y/s200/line+shirt+photo.jpg" width="170" /></a></div>
</div>
அதிரை.மெய்சாhttp://www.blogger.com/profile/07191876547261572485noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5299561821912104711.post-28311176342348868502018-05-15T06:10:00.000+04:002018-05-15T07:27:31.397+04:00புனிதமிகு ரமலானே வருக வருக. <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
புனிதமிகு ரமலானே வருகவருக<br />
இப்புவி செழிக்க<br />
அருள்மழையை தருக தருக<br />
<a name='more'></a><br />
<br />
சுட்டெரிக்கும் வெயில் வந்தும் <br />
சூரியனுக்கே சவால் விட்டு<br />
வெட்டவெளி வெண்திரையை<br />
வெப்பம் வந்து வாட்டியபோதும்<br />
சுடர்விட்டுப் பிறந்திடுமாம் <br />
ரமலான் எனும் புனித மாதம்<br />
<br />
எத்திசையும் அருள் மணக்க <br />
பசி வயிற்றை அமல் நிறைக்க<br />
பாவம்பகை விட்டொழித்து <br />
படைத்தவனைப் புகழும் மாதம்<br />
<br />
சஹர் உணவில் ருசிமறந்து <br />
இஃப்தாரில் பசிமறந்து<br />
இறையோனை மனதில் சுமந்து <br />
இயலும்வரை தௌபா செய்து<br />
இஸ்லாத்தின் கடமைகளை <br />
இன்முகத்தால் நிறைக்கும் மாதம்<br />
<br />
ஏழைஎளிய மக்களுக்கு<br />
ஜகாத் ஸதகா வழங்கும் மாதம் <br />
ஐவேளை தொழுகையுடன் <br />
மெய்வணக்கம் செய்திடும் மாதம் <br />
அள்ளும் பகலும் அவனை நினைத்து<br />
அழுது மன்னிப்புத் தேடும் மாதம்<br />
<br />
அருள்மறையாம் இறைவேதம்<br />
இறங்கியதும் இம்மாதம்<br />
ஆசை நபுஸு அடக்கி நாமும் <br />
அகத்தூய்மை கொள்ளும் மாதம் <br />
<br />
செய்த்தானை விரட்டியடித்து <br />
செய்த பலாய் நீக்கும் மாதம்<br />
மெய்யறிந்து மேன்மையறிந்து<br />
மேலும் நன்மை சேர்க்கும் மாதம்<br />
<br />
துன்பத்தைத் தூரமாக்கி <br />
இன்பத்தை ஏற்கும் மாதம்<br />
தூக்கத்தை தியாகம் செய்து <br />
தூய வணக்கம் செய்திடும் மாதம் <br />
<br />
புண்ணிய மிக்க ரமலானை <br />
கண்ணியமாய் வரவேற்போம் <br />
எண்ணத்தூய்மை வணக்கம்கொண்டு <br />
எண்ணிலடங்கா அருள்பெறுவோம்<br />
<br />
<span style="color: red;">அதிரை மெய்சா</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtdFGT40fDMjPuG2Jj1OB739UsjKQMgkobLJHyrpzBLSB7bOnIQ6owthVyvbW6-MZ8KjJweg24dzZZfUrxJTeYT-Vgr6mwD3DgkKG2YGekCvj4-iXR9u4MlXjzEoP3Heyt5yIqbcg-pxY/s1600/line+shirt+photo.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="390" data-original-width="333" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtdFGT40fDMjPuG2Jj1OB739UsjKQMgkobLJHyrpzBLSB7bOnIQ6owthVyvbW6-MZ8KjJweg24dzZZfUrxJTeYT-Vgr6mwD3DgkKG2YGekCvj4-iXR9u4MlXjzEoP3Heyt5yIqbcg-pxY/s200/line+shirt+photo.jpg" width="170" /></a></div>
</div>
அதிரை.மெய்சாhttp://www.blogger.com/profile/07191876547261572485noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5299561821912104711.post-37520148500245455972018-05-13T07:31:00.000+04:002018-05-14T06:28:05.771+04:00கவனம்.! குழந்தைகள் பாதுகாப்பில் தேவை கவனம்.!!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
முன்பொரு காலத்தில் நம் வீட்டுக் குழந்தைகளை சுதந்திரமாக சுற்றித்திரிய விட்டு தெருக்குழந்தைகளுடன் விளையாட விட்டு நிம்மதியாக பயமின்றி நமது மற்ற வேலைகளில் கவனம் செலுத்தி வந்தோம். குழந்தைகளும் ஆசைதீர சுதந்திரமாக இஷ்டம்போல் விளையாடிக் களைத்து வியர்த்து சந்தோசமாக பாதுகாப்பாக வீடு திரும்புவார்கள்.<br />
<a name='more'></a><br />
<br />
அது கள்ளம் கபடமற்ற வெள்ளைமனம் கொண்ட காலமாக இருந்தது. விஞ்ஞானமும் நவீனமும் அத்தனை வளர்ச்சி பெறாமல் இருந்தது.ஆகவே மேற்கொண்டு அறிந்துகொள்ள வழிதெரியாமல் ஒரு குறுகிய வட்டத்திற்குள் தான் எந்தஒரு விஷயத்தையும் அறிந்து வைத்திருக்க முடிந்தது . ஆகவே ஒருவித பய உணர்வு குழந்தைகளுக்கு இருந்தது.<br />
<br />
ஆனால் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு இரண்டு வகையான பாதுகாப்பு தேவைப்படுகிறது.முதலாவது அது வளரும் சூழ்நிலையில் தீய பழக்கவழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளாமல் நல்வழியில் செல்ல பெற்றோர்களின் கவனமும்,கண்காணிப்பும் நிறைந்த பாதுகாப்பு. <br />
<br />
அடுத்து இன்றைய சூழ்நிலையில் நடந்துவரும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை,குழந்தை கடத்தல் போன்ற குற்றங்களைச்செய்யும் சமூகவிரோதிகளிடமிருந்தும் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி.? இப்படியான இந்த இரண்டுவகை பாதுகாப்பும் பலமாக இருந்தால் குழந்தைகளின் வாழ்வு மிகச் சிறப்பானதாக இருக்கும். சமூக விரோதிகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்தை புரியும்படியாக அக்குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்.அந்த சூழ்நிலையில் பாதுகாப்பை தேடிக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்துச்சொல்ல வேண்டும்.<br />
<br />
<br />
ஆனால் இன்றைய காலகட்ட அவசர உலகில் குழந்தைகளை பராமரிப்பதில், குழந்தைகள்
வளர்ப்பில்,குழந்தைகளை பாதுகாப்பதில், குழந்தைகளின் பழக்கவழக்கத்தை
கவனிப்பதில்,குழந்தைகளுக்கு புத்திமதி சொல்வதில் சற்று நாம் கவனக் குறைவாகவே இருந்து வருகிறோம் என்பது நிதர்சன
உண்மையாக இருக்கிறது.ஏதோ காலை எழுந்ததும் அதன் காலைக் கடமைகளை முடித்ததும்
தலைவாரிவிட்டு ஆடை அணிவித்து உணவு கொடுத்து அனுப்பிவைத்து விடுகிறோம். அண்டையர்
வீட்டு பிற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் என்று நாம்
கவனிக்காமல் இருந்து விடுகிறோம். பிறகு நாம் வீட்டு வேலையில் மூழ்கிப்
போனதும் குழந்தையை பற்றிய சிந்தனையே இல்லாமல் மறந்தே போய் விடுகிறோம்.<br />
<br />
இப்படி கவனிக்கப்படாமல் விடுவதால்தான் குழந்தைகள் பல விபரீத நிகழ்வுக்கு ஆளாகிறார்கள்.பழக்கவழக்கமும் மாறிப்போய் விடுகிறது.பொய் பேசுவதற்கும் துணிவு ஏற்பட்டுப்போய் சில நேரங்களில் தனது நண்பன் நண்பி கொடுக்கும் தைரியத்திலும் யோசனையிலும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு காரணம் சொல்லி தப்பிக்க முயல்வார்கள்.<br />
<br />
இதற்க்கெல்லாம் பெற்றோராகிய நாம் தான் முக்கிய காரணமாக இருக்கிறோம். தமது குழந்தை யார்யாருடன் பழகுகிறது அப்படி பழகும் மற்ற குழந்தைகள் எப்படிப்பட்ட குணம்கொண்டவர்களாக இருக்கிறார்கள். என்னமாதிரியான விளையாட்டுக்கள் விளையாடுகிறது எந்த இடத்தில் விளையாடிக் கொண்டு இருக்கிறது. குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் போது அந்நியர்களால் கவனிக்கப்படுகிறார்களா.? இப்படி ஒவ்வொரு அசைவிலும் நம் குழந்தைகளை சுற்றி நமது பார்வை இருக்கவேண்டும்.அப்போதுதான் அவர்களின் பழக்கவழக்கமும் பாதுகாப்பும் அவர்களுக்கு ஏற்படவிருக்கும் ஆபத்துக்களையும் உணர்ந்து முன்னெச்சரிக்கையுடன் அதற்குத்தகுந்தவாறு குழந்தைகளை நாம் கவனமுடன் பார்த்துக் கொள்ள ஏதுவாக இருக்கும்.<br />
<br />
அறியாப்பருவம் கொண்ட அக்குழந்தைகளுக்கு நல்லது எது கேட்டது எது என பிரித்துப் பார்க்காத தெரியாத அந்த மழலைப் பருவம் தெளிவடையும் வரை அதற்க்கென சொந்தமாக சிந்தித்து செயல்படும் அறிவுத்திறன் வரும்வரை ஒவ்வொரு குழந்தைகளுக்கும் பெற்றோர்களின் பாதுகாப்பு அவசியம் தேவைப்படுவதால் முடிந்தவரை நமது கண்காணிப்பில் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்ப்பதே அக்குழந்தைகளின் வருங்காலம் சீரும் சிறப்புமாக அமைய வழிவகுக்கும். <br />
<br />
அதிரை மெய்சா<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWQkBSFTOh6G7BM3YfkQ1BF8Dy-u4O5-yDLoGOxW4-c9iAaUG1TG8bcICPZ13-S75DoZqYfFzWRvIVFc4P4sZM368QEa_8JQJfuvUu08ix10tjRAqP1dk9Uv9CDaq6S_Akuk8yd5x8eYI/s1600/jocket+photo.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="259" data-original-width="264" height="196" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWQkBSFTOh6G7BM3YfkQ1BF8Dy-u4O5-yDLoGOxW4-c9iAaUG1TG8bcICPZ13-S75DoZqYfFzWRvIVFc4P4sZM368QEa_8JQJfuvUu08ix10tjRAqP1dk9Uv9CDaq6S_Akuk8yd5x8eYI/s200/jocket+photo.jpg" width="200" /></a></div>
<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
அதிரை.மெய்சாhttp://www.blogger.com/profile/07191876547261572485noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5299561821912104711.post-85840437517185993142018-05-04T06:17:00.002+04:002018-05-05T12:02:03.804+04:00கவிதையே தெரியுமா ? <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கவிதைக்குள் மெல்லிய<br />
ஓசையெனும் உயிர் <br />
வேண்டும்<br />
<a name='more'></a><br />
<br />
உள்ளும் புறமும்<br />
அர்த்தங்கள் பல்லாயிரம்<br />
புதைந்திருக்க<br />
வேண்டும்<br />
<br />
கற்பனை யானாலும்<br />
சொற்க்களை<br />
வாசிப்போர்க்கு<br />
நேசிப்பு வர<br />
வேண்டும்<br />
<br />
கவிதைச்சொல்<br />
பூச்சுக்களில்லா<br />
புரிந்திடும் சொல்கொண்டு<br />
புனைத்து<br />
செவி திறந்து<br />
மெய்மறக்கச்<br />
செய்திட வேண்டும்<br />
<br />
எக்கரு கொண்டு<br />
தொடங்கினும்<br />
அக்கருவின் அடையாளம்<br />
முன்னுரையிலும்<br />
முடிவுரையிலும்<br />
முகம் காட்ட வேண்டும்<br />
<br />
சாந்தம் சங்கமமாகி<br />
மௌனத்திற்க்கு<br />
முற்றுப்புள்ளி வைத்து<br />
ஆதிக்கம் இல்லா<br />
அகந்தை கொள்ளா<br />
சுதந்திர படிமங்களை<br />
கொண்டிருக்க வேண்டும்<br />
<br />
புழக்கமில்லாச் சொற்க்களை <br />
புதுமைக்காக<br />
புகுத்தினாலும்<br />
அகராதியும்<br />
அறந்தமிழுமே<br />
ஆதிக்கம் செலுத்திட<br />
வேண்டும்<br />
<br />
முடிவில் கவிதை <br />
காட்சிக்கு வரும்போது<br />
மூன்றானாலும்<br />
முப்பது கோடி முறையானாலும்<br />
வாசிப்பில் தெகிட்டா<br />
முக்கனிச் சுவை வேண்டும்<br />
<br />
<br />
அதிரை மெய்சா<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCoJoLxc70tS3B4vkINwtPHv3wthaUtU0jaBIw0aUzOfRozTcc3vYOdgkZ7XlOJsHXkmJ73721B1DwuexoooWfFEOi6hmbS3hPokmlLx9Wu7EPgeUatipHtAYWcTQ3WJXsBbcYjAxkK1s/s1600/line+shirt+photo.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="390" data-original-width="333" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCoJoLxc70tS3B4vkINwtPHv3wthaUtU0jaBIw0aUzOfRozTcc3vYOdgkZ7XlOJsHXkmJ73721B1DwuexoooWfFEOi6hmbS3hPokmlLx9Wu7EPgeUatipHtAYWcTQ3WJXsBbcYjAxkK1s/s200/line+shirt+photo.jpg" width="170" /></a></div>
<br /></div>
அதிரை.மெய்சாhttp://www.blogger.com/profile/07191876547261572485noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5299561821912104711.post-33289627507252642972018-05-02T06:18:00.001+04:002018-05-02T06:51:35.764+04:00 யாரைத்தான் நம்புவது.!?!?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நம்பிக்கை என்பது மனிதனுக்குமனிதன் மனசாட்சிப்படி அவனது சொல்,செயல்,நடவடிக்கையென அனைத்திலும் நம்பகத்தன்மையை நிரூபிக்கும் மிகச்சிறந்த குணமாகும்.இவ்வுலக வாழ்க்கைக்கு நமக்குத் தேவையான எல்லா விஷயங்களிலுமே நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டுதான் இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதனது வாழ்க்கையும் இயங்கிக் கொண்டு இருக்கிறது.<br />
<a name='more'></a><br />
<br />
நம்பிக்கை மனிதனைமனிதன் ஒன்றிணைக்கும் மிகப்பெரிய சக்தியாகும். நம்பிக்கை தோற்றுப்போய் விட்டால் அங்கு மனிதம் செத்து விடுகிறது. அப்படி மனிதம் ஒட்டுமொத்தமாக செத்துவிட்டால் இவ்வுலகம் சுடுகாட்டிற்கு சமமாக வாழ தகுதி இல்லாத இடமாக போய்விடும்.அப்படியானால் நம்பிக்கையை பேணிநடப்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக அத்தியாவிசயமாக இருக்கிறது.<br />
<br />
நம்பிக்கை நமது இவ்வுலக வாழ்க்கையில் நாலாப்புறமும் தேவைப்படுகிறது. உறவு முறையிலிருந்து உலக நடப்புக்கள் வரை அதாவது தாய்,தந்தை, அண்ணன்,தம்பி ,கணவன்,மனைவி,நண்பன்,முதலாளி, தொழிலாளி, விற்பனையாளர், மருத்துவர்,ஆட்சியாளர், நீதிவழங்குவோர் இப்படி இவ்வுலக வாழ்க்கையின் அனைத்து தரப்பின் தேவைகளும், தீர்வுகளும் நம்பிக்கையின் அடிப்படையில்தான் இயங்கிவருகிறது. ஒருத்தரை நம்பி ஒரு பொறுப்பான வேலையை ஒப்படைத்தாலோ,அவசரத்தேவைக்கு பணம் பொருள் கொடுத்து உதவினாலோ,ஒருபொருளை ஒருசொத்தை பாதுகாக்க அல்லது காவலுக்கு நியமித்தாலோ,அதன் உரிமையாளருக்கு துரோகம் செய்திடாமல் நம்பிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும். இதிலிருந்து மாறுபட்டு நடந்துகொள்வோர்களை நம்பிக்கை துரோகி என்று அழைக்கப்படுவார்கள்.<br />
<br />
பொய்யான வாக்குறுதி அளிப்பதும் ஒருவகை நம்பிக்கை துரோகம்தான்.<br />
அதுமட்டுமல்ல ஒருவர் நம்மீது நம்பிக்கைவைத்து மன ஆறுதலுக்காகவோ அல்லது அதன் விபரம் அறிந்து கொள்வதற்காகவோ யாரிடமும் பகிர்ந்து கொள்ளவேண்டாம் என்று சொல்லிக்காட்டும் ஒரு ரகசிய அல்லது அந்தரங்க அல்லது குடும்ப செய்தியை கேட்டறிந்த பின் பிறரிடம் சொல்லிக்காட்டுவது அதை பற்றி விமர்சிப்பது நம்பிக்கை துரோகத்திலேயே பெரும் துரோகமாக இருக்கிறது. யாரொருவர் நம்பிக்கை துரோகத்தால் பாதிக்கப்பட்டார்களோ அப்படி பாதிக்கப்பட்டோர்களின் மனவேதனையும் சபிக்கப்படும் சாபமும் நம்மை வாழ்நாள் முழுதும் நிம்மதியிழக்கச் செய்துவிடும்.<br />
<br />
இப்படி எங்கும் எதிலும் நம்பிக்கையின் அடிப்படையில் தான் இவ்வுலக வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் நகர்ந்து கொண்டு இருக்கிறது.ஆகையால் யாரைத்தான் நம்புவது என்கிற சந்தேகத்தை நம் மனதிலிருந்து நீக்கி <br />
<b>நம்பிக்கைதான் உலகம்
நம்பிக்கைதான் வாழ்க்கை</b> என்கிற இச்சொல்லிற்க்கேற்ப இதை உண்மையாக ஒவ்வொருவரும் கடைப்பிடித்து உறுதியுடன் நம்பும்படி நடந்தோமேயானால் இவ்வுலகில் மனிதம் தழைக்கும். மனசாட்சியும், மனிதநேயமும் நிலைத்து நிற்கும்.<br />
<br />
<span style="color: white;"><span style="background-color: #e69138;">அதிரை மெய்சா<span style="background-color: white;"> </span></span></span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh86xup_qr87rG1JXR92WZlKcpvD58xMjVc6EY_bOplon0ts0U_vyTq2pwvrht4mFogvGPc1JUI7qr-RsROmbKZZ2M42whpjX101iWMw5HTI-ClGuoMQbM5OTuyjpbT02rEgjOjrJ5d3VY/s1600/jocket+photo.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="259" data-original-width="264" height="195" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh86xup_qr87rG1JXR92WZlKcpvD58xMjVc6EY_bOplon0ts0U_vyTq2pwvrht4mFogvGPc1JUI7qr-RsROmbKZZ2M42whpjX101iWMw5HTI-ClGuoMQbM5OTuyjpbT02rEgjOjrJ5d3VY/s200/jocket+photo.jpg" width="200" /></a></div>
</div>
அதிரை.மெய்சாhttp://www.blogger.com/profile/07191876547261572485noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5299561821912104711.post-31474025571583431442018-04-27T05:52:00.001+04:002018-04-27T05:52:41.782+04:00நானும் ரவுடி நானும் ரவுடிதான்.!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ரவுடி என்று ஒருமனிதனைச் சொல்ல நாம் கேட்கும்போதே அச்சம் கலந்த வெறுக்கத்தக்க நபராக சராசரிமனிதனிலிருந்து மாறுபட்டவனாகவே நாம் கருதுகிறோம். காரணம் இந்த பெயர்கொண்டு அழைக்கப்படும் மனிதன் சொல், செயல்,நடவடிக்கை அனைத்திலும் முரண்பாடாக இருப்பதுடன் எந்த ஒரு பாதகச் செயலையும் ஈவிரக்கமின்றி பின்விளைவுகளை யோசிக்காமல் செய்து முடிப்பவனாக இருக்கிறான்.<br />
<a name='more'></a><br />
<br />
மனிதன் பிறக்கும்போதே நாம் ஒரு ரவுடியாக வேண்டும் என்று நினைத்து இப்படியான ஒரு குணத்துடனோ,இப்படியான ஒரு சிந்தனையுடனோ யாரும் பிறப்பதில்லை.எந்தக்குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் வளரும் சூழ்நிலையே காரணமாக இருக்கிறது. அவரவர் பெற்றோர்களின் வளர்ப்புமுறை,பழகும் நண்பர்கள்,குடும்பப் பின்னணி இப்படி பல காரணங்கள் மனிதனது மனமாற்றத்தை உருவாக்கி ரவுடி என்ற பெயரை வாங்கி கொடுத்து விடுகிறது.<br />
<br />
இப்படி ரவுடி என்ற பெயரை பெற்றவர்கள் தான் ஒரு மிகப்பெரிய சக்தியாக நினைத்துக் கொண்டு தனது மனதை மூர்க்கத்தனமாக்கிக் கொண்டு தன்னை மிஞ்சியவர்கள் யாருமில்லை என்கிற ஆணவம் கொண்டு தான் மனது வைத்தால் எதையும் செய்யலாம் என்கிற எண்ணம்கொண்டு தனக்கு எல்லோரும் பயப்படுகிறார்கள் என்று கற்பனை செய்துகொண்டு ஈவிரக்கமின்றி மனிதாபிமானமின்றி மனித நேயமின்றி சகமனிதனை மிரட்டுவதும் அடிதடி,வன்செயல்கள்,கொடுஞ்செயல்கள்,வழிப்பறி கொள்ளை கொலைப்பாதகங்கள், போன்ற குற்றச்செயல்களை செய்தும் வருகிறார்கள்.<br />
<br />
ஆரம்பகாலத்தில் ரவுடி என்று சொல்லிக் கொண்டு தன்னை ஒரு பெரிய சக்தியாக
நினைத்து சந்தோசமாக காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தவர்களின் முடிவு எந்த
ரவுடிக்கும் சாதகமாக அமைந்ததில்லை. மாறாக சமுதாயத்தார் முன்னிலையில்
கேவலப்பட்டு யாருடைய அனுதாபமோ,உதவியோ கிடைக்காமல் ஒதுக்கப்பட்டு
சபிக்கப்பட்டு பெரும்குற்றவாளியாக காவல்துறையால் தேடப்பட்டு தனது
வாழ்க்கையை சின்னாபின்னமாக்கிக் கொண்டு பெரும்தண்டனைக்கு ஆளாகி தன்னைத்தானே
அழித்துக் கொள்கிறார்கள்.<br />
<br />
இப்படி இவ்வுலகில் உள்ள எல்லா மனிதனும் தனது செயல் நடவடிக்கைகளை
ரவுடித்தனமாக அமைத்துக் கொண்டானேயானால் இவ்வுலகே ரவுடி மயமாகி ஒட்டு மொத்த
உலகமும் ஒருநொடியில் கலவர பூமியாகி அழிந்து போய்விடும். நாம் இவ்வுலகில் பிறந்ததற்கான
அர்த்தமில்லாமல் போய்விடும்.மனிதம் என்கிற இனமே இல்லாமல் போய்விடும். <br />
<br />
மனிதன் ஆறறிவுடன் இவ்வுலகத்திற்கு வந்தவன்.சிந்தித்து செயல்படும் பகுத்தறிவைக் கொண்டவன். எனவே எது நல்லது எது தீயது என்று உணர்ந்து நடந்து தனது வாழ்க்கையை தரத்துடன் அமைத்துக் கொண்டு வாழவேண்டும்.<br />
மனிதனுக்கு மனிதன் ஏற்ற தாழ்வு பாராமல் தன்னை மிஞ்சியவன் யாருமில்லை என்கிற அகந்தை கொள்ளாமல் ஒருவருக்கொருவர் உதவிகள் செய்து அன்புடன் பழக வேண்டும். வாழ நினைத்தால் வாழலாம் நல் வழியா இல்லை பூமியில்.என்ற தாரக மந்திரத்தை தன்னம்பிக்கையை கொண்டு வளர்த்திட்டு தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் இழிவுபடுத்தி சமூகத்தாரால் சபிக்கப்படும் ரவுடித்தனமான செயலை கைவிட்டு சமுதாயத்தார் மதிக்கும்படியான செயல் நடவடிக்கைகளை அமைத்துக் கொண்டோமேயானால் நற்ப்பெயருடனும் புகழுடனும் சாகும்வரை சந்தோசமாக இவ்வுலகில் வாழலாம்.<br />
<br />
அதிரை மெய்சா<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsjROrBETS4Zzahgneh6hXRxJJnrNBJFO9I1xtvhtoomUtAHodhOGj0k0wei2bOYD54OcXrgkeuGb-UZSPCU4ssKGNvDEWk-EbpjRnZ8ZFsntnzoE4dSuxbwI75I3yaomUGkCyu2S68rA/s1600/white+shirt+p.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="758" data-original-width="594" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsjROrBETS4Zzahgneh6hXRxJJnrNBJFO9I1xtvhtoomUtAHodhOGj0k0wei2bOYD54OcXrgkeuGb-UZSPCU4ssKGNvDEWk-EbpjRnZ8ZFsntnzoE4dSuxbwI75I3yaomUGkCyu2S68rA/s200/white+shirt+p.jpg" width="156" /></a></div>
<br />
<br /></div>
அதிரை.மெய்சாhttp://www.blogger.com/profile/07191876547261572485noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5299561821912104711.post-53212618901581797422018-04-21T06:16:00.000+04:002018-04-22T05:35:29.251+04:00நெஞ்சு பொறுக்குதில்லையே ஆஷிஃபா. !!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtOCN6B5ujLrCb2CyZzTbZbIV0gZLdoeYpo6QfLq-MpRyABVYAv-vrZ-aTMd3yi3B8hCRkO9E6ad12lI8JFj0tHPslkkK9doh874zVcl5Xl83MdFG_ChbKFmcwU8kQ_J9iFzi3M3tfTWk/s1600/Justice-for-Asifa.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="506" data-original-width="853" height="189" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtOCN6B5ujLrCb2CyZzTbZbIV0gZLdoeYpo6QfLq-MpRyABVYAv-vrZ-aTMd3yi3B8hCRkO9E6ad12lI8JFj0tHPslkkK9doh874zVcl5Xl83MdFG_ChbKFmcwU8kQ_J9iFzi3M3tfTWk/s320/Justice-for-Asifa.png" width="320" /></a></div>
<br />
<br />
நெஞ்சு பொறுக்குதில்லையே <br />
இப்பிஞ்சுக் குழந்தைக்கு நிகழ்ந்த<br />
வன்கொடுமையை நினைக்கையில் <br />
நெஞ்சு பொறுக்குதில்லையே <br />
<a name='more'></a><br />
<br />
மனித உருகொண்ட<br />
கொடிய மிருகங்களின் <br />
கோரப்பிடியில்-சிக்கி நீ <br />
எப்படியெல்லாம் சிதைபட்டாயோ<br />
நினைக்கையில்<br />
நெஞ்சுபொறுக்குதில்லையே<br />
<br />
ஆஷிஃபா பெயர் கொண்ட <br />
பெண்பிள்ளை <br />
என் வீட்டிலும் உண்டு<br />
அனுதினமும் அன்பாய் <br />
கூப்பிட்டவன் குரல் <br />
அதிர்ச்சியில் உறைந்து போய் <br />
தளுதளுக்கிறது இன்று<br />
<br />
காஷ்மீரத்து காடுகளில் <br />
சுதந்திரமாய்ச் சுற்றித்திரிந்த <br />
உனக்கு - அங்கு <br />
காட்டுமிராண்டிகள் வசிப்பது <br />
கண்ணுக்குத்தெரியாமல் போனதே<br />
<br />
பச்சிளம் குழந்தையை<br />
உச்சி முகர்ந்து<br />
பிஞ்சுக்கரத்தினை அள்ளியணைத்து <br />
துள்ளி விளையாடுவதை <br />
பார்த்து ரசிக்கத்தானே <br />
மனம் வரும்<br />
<br />
உனை படுக்கையில் கிடத்தி<br />
பால்வடியும் உன்னுடலை<br />
பலகண்களும் விருந்தாக்கி <br />
பாழ்படுத்திப்பார்க்க<br />
பாவிகளுக்கு <br />
எப்படித்தான் மனம் வந்ததோ <br />
<br />
உனக்கு நீதி கிடைத்திட வேண்டும் <br />
உனைத் தீண்டிய கும்பலை <br />
தோண்டிப் புதைத்திட வேண்டும்<br />
தீ வைத்துக் கொளுத்தி <br />
தீக்கிரையாக்கிட வேண்டும் <br />
அத்தனை தண்டனைகளையும்<br />
அனுபவிக்கக் கொடுத்து<br />
அணுஅணுவாய்க் கொல்லப்பட வேண்டும்<br />
<br />
இனியொரு குழந்தைக்கு <br />
இக்கொடுமை நடக்காதிருக்க<br />
இக்கொடிய கும்பலுக்கு <br />
கொடுக்கும் தண்டனை <br />
பாடமாக இருக்கவேண்டும்<br />
<br />
<span style="color: red;">JUSTICE FOR ASIFA</span> <br />
<br />
அதிரை மெய்சா <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcnH14DKUWg5frAgSuYArv6JO_turqfGi6cKzdqguP9THfF5NyDoUtb8rYKaga6V2m9yFE47boBCkCN4GFz2lypPj60yze43QZGp74xwjwnLAjY0dQLAF1v-H34jeLAPlmPSccxnFZilY/s1600/white+shirt+p.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="758" data-original-width="594" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcnH14DKUWg5frAgSuYArv6JO_turqfGi6cKzdqguP9THfF5NyDoUtb8rYKaga6V2m9yFE47boBCkCN4GFz2lypPj60yze43QZGp74xwjwnLAjY0dQLAF1v-H34jeLAPlmPSccxnFZilY/s200/white+shirt+p.jpg" width="156" /></a></div>
<br /></div>
அதிரை.மெய்சாhttp://www.blogger.com/profile/07191876547261572485noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5299561821912104711.post-33800289817453176082018-04-16T07:14:00.001+04:002018-04-17T07:03:14.836+04:00யார் அந்தத் தீவிரவாதி.!?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இயல்பாகவே தீவிரவாதி என்கிற சொல்லைக் கேட்டாலே நமக்கு ஒருவித அச்சமும்,அதிர்ச்சியும் மனதில் ஏற்படுகிறது. ஏனென்றால் இந்த சொல் ஒரு பயங்கர குற்றம் செய்பவர்கள் போன்று நம் எண்ணங்களில் ஆழமாக பதிந்து விட்டது. அதுவும் இப்போதைய காலகட்டத்தில் இந்த சொல்லை நாம் அடிக்கடி பத்திரிகைச் செய்திகளிலும்,காணொளிச் செய்திகளிலும் சமூக வலைதளச் செய்திகளிலும் காணமுடிகிறது.<br />
<a name='more'></a><br />
<br />
தீவிரம் என்பதன் பொருள் ஒரு விஷயத்தில் அதிகமாக அக்கறை செலுத்துவது ஆர்வம் கொள்வது ரொம்பவும் ஈடுபாட்டுடன் செயல்படுவது இப்படியான பல அர்த்தங்களை கொண்டதாகும். உலக நடைமுறை விஷயங்கள் ஒவ்வொன்றிலும் நாம் தீவிரம் என்ற சொல்லை காணலாம். உதாரணத்திற்க்கு தீவிர சிகிச்சை பிரிவு,தீவிர விசாரணை,தீவிர நம்பிக்கை,தீவிர நடவடிக்கை,தீவிர கண்காணிப்பு, இப்படி எத்தனையோ அன்றாடம் அவசியமாக உபயோகப்படும் வார்த்தைகளோடு கலந்து இந்த தீவிரம் என்ற சொல் பின்னிப்பிணைந்து இருக்கிறது.<br />
<br />
இன்னும் சொல்லப்போனால் இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஏதாவது ஒரு விஷயத்தில் தீவிரவாதியாகத்தான் இருப்பான்.அவனுக்குள் இருக்கும் ஏதாவது பழக்கவழக்கங்களிலோ,செயல்பாட்டிலோ,விருப்பமான உணவிலோ, காரியங்களிலோ தீவிரம் காட்டுபவனாக இருப்பான். இப்படி தீவிரம் காட்டுபவர்களை யாரும் தீவிரவாதிகள் என்று அழைப்பதில்லை.<br />
<br />
அப்படியென்றால் மக்கள் பயந்து பீதியடையும் தீவிரவாதி என்ற கடுஞ்சொல் யாரைப் பார்த்து சொல்லப்படுகிறது.?<br />
<br />
யார் அந்தத் தீவிரவாதி.?<br />
<br />
மனிதாபிமானமில்லாமல் முரட்டு சிந்தனைக்கு தீவிரமாக அடிமைப்பட்டு மக்களுக்கு பாதிப்பு உண்டு பண்ணுபவர்கள், ஈவிரக்கமின்றி வன்செயல், கொடுஞ்செயல் புரிபவர்கள், மனதை கல்லாக்கிக் கொண்டு கொடூரக் கொலைப் பாதகச் செயல் செய்யத் துணிந்தவர்கள். தேசத்திற்கும் தேச மக்களுக்கும் எப்போதும் அச்சுறுத்தலாய் இருப்பவர்கள், இவர்களே அந்தத் தீவிரவாதிகளாவார்கள்.<br />
<br />
எனவே நல்ல விஷயங்களில் தீவிரம் காட்டாமல் தீய விஷயங்களில் அதிகம் தீவிரம் காட்டுவதால் தீவிரவாதி என்ற சொல் இத்தனை வலிமை பெற்று பயங்கரமான சொல்லாக மக்கள் மனதில் பதிந்து விட்டது. <br />
<br />
இப்படியான தீயவழித் தீவிரவாதம் எல்லோர் மனதிலிருந்து களையப்பட்டு நல்ல செயலுக்காகவும், நல்ல நோக்கத்திற்காகவும், நன்மை தரும் விசயத்திற்காகவும் இவ்வுலக மக்களும்,இவ்வுலகை ஆளும் ஆட்சியாளர்களும் தீவிரமாக இருந்தால் தீவிரவாதி என்ற சொல்லை நம் செவிகள் கேட்கும்போது அச்சமின்றி ஆனந்தம் அடையும்.<br />
<br />
<span style="color: #b45f06;">அதிரை மெய்சா</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2UzGlPVWsZrUM1PTgSQII_dbvf_zdjdtWIdiMCXKEVZHzCBjmZ18FjK9Iv7s-vAF7owcK7UNRZJjusCthyNbWFxnCE9xp5DnDOF3Go1XiYIgIs87MgwMAFGzUQhDJfjLtyr-jm1GBbv8/s1600/white+shirt+p.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="758" data-original-width="594" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2UzGlPVWsZrUM1PTgSQII_dbvf_zdjdtWIdiMCXKEVZHzCBjmZ18FjK9Iv7s-vAF7owcK7UNRZJjusCthyNbWFxnCE9xp5DnDOF3Go1XiYIgIs87MgwMAFGzUQhDJfjLtyr-jm1GBbv8/s200/white+shirt+p.jpg" width="156" /></a></div>
<br /></div>
அதிரை.மெய்சாhttp://www.blogger.com/profile/07191876547261572485noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5299561821912104711.post-66625132826729038622018-04-11T18:56:00.001+04:002018-04-12T06:28:52.631+04:00ஆரோக்கிய வாழ்விற்கு அவசியம் தேவை உடற்பயிற்சி.!!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நாம் உயிர் வாழ உணவு எந்த அளவுக்கு முக்கியமோ அதுபோல நமது உடல் உறுதியுடனும்,வலிமையுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க உடற்பயிற்சி மிக அவசியமாக இருக்கிறது. நவீன இயந்திரங்களும் சாதனங்களும் கண்டுபிடிக்குமுன் மனிதன் உடல் உழைப்பைத்தான் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்ளும்படி இருந்தது.<br />
<a name='more'></a>அப்படி உடல் உழைப்பு அதிகமாக இருந்ததால் உழைப்புடன் சேர்த்து உடலுக்கு பயிற்சியும் கிடைத்தது. எனவே எந்த பெருநோய்களுக்கும் ஆளாகாமல் நம் முன்னோர்கள் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் உயிர் வாழ்ந்தார்கள்.<br />
<br />
ஆனால் இன்றைய காலகட்டத்தில் நவீனக் கண்டுபிடிப்புக்கள் பெருகி எல்லாம் இந்திரமயமாக்கப்பட்டு உடல் உழைப்பு என்பது ஏறக்குறைய நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருகிறது என்றே சொல்லலாம். உடல் உழைப்பு இல்லாமல் போனதால்தான் நாம் இன்று பற்பல நோய்களை சந்தித்துக் கொண்டு அற்ப ஆயுளில் சொற்ப வாழ்க்கை வாழ்ந்து மரணத்தை தழுவிக் கொண்டிருக்கிறோம்.<br />
<br />
காரணம் வியர்வை வெளியேறும் அளவுக்கு உடல் உழைப்பு இல்லாததால் மனமும், உடலும் சுறுசுறுப்பின்றி சோர்வு நிலையை அடைந்து நமது உடல் உறுப்புக்களின் இயக்கமும் இரத்த ஓட்டமும் சராசரி நிலையிலிருந்து குறைந்து விடுகிறது. இதனால் எந்த நோயும் நம்மை எளிதில் தாக்கி விடுகிறது. ஆகவே இந்த சூழ்நிலையில் நமக்கு உடற்பயிற்சி மிக அவசியமானதாக இருக்கிறது.<br />
<br />
உடற்பயிற்சி பலவிதமாக நமது வசதிக்கேற்ப செய்து கொள்ளலாம். நமது வீட்டில் அதற்கான இடவசதியும்,பொருளாதார வசதியும் இருந்தால் உடற்பயிற்சிக்கான கருவிகளை வாங்கி வைத்துக் கொண்டு தினமும் குறிப்பிட்ட நேரத்தை இதற்காக ஒதுக்கி உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம். அல்லது உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று நமக்கு எந்தவிதமான உடற்பயிற்சி அவசியம் என்பதை தேர்வு செய்து அதனை தினமும் தவறாது செய்து வரலாம். வாக்கிங் என்று அழைக்கப்படும் நடைப் பயிற்சி,ஜாக்கிங் என்றழைக்கப்படும் வேகமில்லா ஓட்டம்,சைக்கிளிங் என்றழைக்கப்படும் இருசக்கர வாகனம் ஓட்டுதல் போன்ற பயிற்சி தினமும் செய்துவந்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். அல்லது குறைந்தபட்சம் காலையும், மாலையும் நடைப் பயிற்சி செய்துவந்தாலே உடலுக்கு ஏற்றமாகவும் புத்துணர்வு தருவதாகவும் இருக்கிறது.<br />
<br />
இப்படி ஏதாவது ஒரு ரீதியில் உடற்பயிற்சி செய்து நமது உடலை சுறுசுறுப்புடனும் சீரான இரத்த ஓட்டத்துடனும் வைத்துக் கொண்டோமேயானால் பெருநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதுடன் ஆரோக்கியமுடன் நீண்டநாள் உயிர்வாழவும் இந்த உடற்பயிற்சி பெரிதும் உதவியாக இருக்கும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை.<br />
<br />
<span style="color: #b45f06;">அதிரை மெய்சா</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3YjqKFyNE62rmCKJZF4E-PXqjSX9R9GFmZMLexKXDxcf5ElzZYt4noNIR5q_x3LCWykzRrVNcfWPjR6JK515U6czEXkkeMkc1SYhQdyxI1LynxdUAIZbesv2zMPqCMzEn1jDRuxEKxoY/s1600/white+shirt+p.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="758" data-original-width="594" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3YjqKFyNE62rmCKJZF4E-PXqjSX9R9GFmZMLexKXDxcf5ElzZYt4noNIR5q_x3LCWykzRrVNcfWPjR6JK515U6czEXkkeMkc1SYhQdyxI1LynxdUAIZbesv2zMPqCMzEn1jDRuxEKxoY/s200/white+shirt+p.jpg" width="156" /></a></div>
</div>
அதிரை.மெய்சாhttp://www.blogger.com/profile/07191876547261572485noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5299561821912104711.post-71214946303045402292018-04-09T06:34:00.003+04:002018-04-11T13:15:15.663+04:00விஷ ஜந்துக்கள் ஜாக்கிரதை.! அதற்க்கு என்ன செய்யலாம்.!?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கோடை வெயில் அகோர முகம் கொண்டு கொளுத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நாட்டில் தண்ணீர்ப் பஞ்சம் ஒருபுறமிருக்க மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் விஷ ஜந்துக்களுக்கும் பயந்து வாழவேண்டி உள்ளது.<br />
<a name='more'></a>நமது வசிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள காடு முற்புதர்களில் வசிக்கும் பாம்பு, பூரான், தேள்,நட்டுவாக்களி,விஷ வண்டு,காட்டு மரவட்டை,சிலந்தி போன்ற விஷ ஜந்துக்கள் இடமாற்றம் வேண்டி மக்கள் வசிக்கும் வசிப்பிடத்திற்குள் ஊடுருவி வர அதிக வாய்ப்பு உள்ளது. காரணம் வெயிலின் தாக்கத்தாலும், தண்ணீர் தட்டுப்பாட்டால் ஈரத்தன்மை அற்று பூமி வறண்டு போவதாலும் இத்தகைய தட்பவெட்ப சூழ்நிலையில் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டி காடுகளிலும் கழிவு நீர்களிலும் வாழும் விஷ ஜந்துக்கள் இடம் பெயர்கிறது. இந்த சமயத்தில் விஷ ஜந்துக்கள் தீண்டும்போது விஷத்தன்மை அதிக சக்தி கொண்டதாக இருக்கிறது. இதனால் விஷ ஜந்துக்கள் தீண்டியவர்களுக்கு சில சமயம் துரதிஷ்டாவசமாக அகால மரணமும் ஏற்ப்படுவதுண்டு. <br />
<br />
இத்தருணத்தில் நாம் மிக கவனமுடனும் முன்னெச்செரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியமாக இருக்கிறது. நமது வசிப்பிடங்களை சுத்தமாக வைத்துக் கொள்வதுடன் சமையலுக்காக சுத்தம் செய்யும் சைவ, அசைவக் கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தி அந்த இடத்தை துர்நாற்றம் வீசாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.<br />
<br />
வீட்டில் தேவையில்லாத பொருட்களை வீசியெறியாமல் அதை குப்பைபோல் ஒருமூளையில் சேகரித்து வைப்பது, அட்டைப்பெட்டி மற்றும் கூடைகளில் சேமித்து வைப்பது போன்ற அலட்சியப் போக்கை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இப்படி குப்பை கூலங்கள் நீண்டநாள் சேமித்து வைப்பதால் விஷஜந்துக்கள் அதில் தஞ்சமடைந்து இருக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே அதை அகற்றும் போதோ அல்லது அதிலிருந்து ஏதாவது பொருளை கைகளால் எடுக்கும்போதோ எச்சரிக்கையுடன் கவனித்து பார்ப்பது நல்லது.<br />
<br />
அடுத்தபடியாக வீட்டில் குழந்தைகள் விளையாடும் விளையாட்டுப் பொருட்களை சேகரித்து வைக்கும் பெட்டி,புத்தகப்பை காலனி ஆகியவற்றை நன்கு சோதித்து அதன்பிறகு குழந்தைகளுக்கு கொடுப்பது பாதுகாப்பாக இருக்கும். இதன் உள் பகுதியிலும் விஷஜந்துக்கள் ஊடுருவி இருந்து கொள்ள வாய்ப்பு உள்ளது.<br />
<br />
மற்றும் துணிகளைத்துவைத்து கழுகியபின் கொடிகளில் உலரவைத்து எடுக்கும்போது நன்கு உதறியப்பார்த்த பின்பு வீட்டிற்குள் கொண்டுவருவது நல்லது.ஏனெனில் தேள்,பூரான்,சிலந்தி மற்றும் சில விஷப் பூச்சிகள் துணிகளோடு சேர்ந்து ஒட்டிக் கொண்டு இருக்கவும் வாய்ப்பு உள்ளது.<br />
<br />
இப்படி பலவகையிலும் நமது வசிப்பிடங்களை சுத்தமாகவும் கவனமாகவும் வைத்துக் கொண்டோமேயானால் விபரீத நிகழ்வு ஏதும் ஏற்படுமுன் இந்த விஷ ஜந்துக்களிடமிருந்து நாமும் நமது குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.<br />
<br />
<span style="color: orange;">அதிரை மெய்சா</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxTyEJQZrg8wsYhl8yIvkEvyH7SFXLma33O8krb0S4nJIX6Hes80-MISihYZs22_lys2BSsLqlgLCCzWLn7xflt1djnAehyphenhyphenJQ9xXvwYZQJrBFAkvlYOY5n-Kvmpg5JAxB5yhd8KgrzdSw/s1600/white+shirt+p.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="758" data-original-width="594" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxTyEJQZrg8wsYhl8yIvkEvyH7SFXLma33O8krb0S4nJIX6Hes80-MISihYZs22_lys2BSsLqlgLCCzWLn7xflt1djnAehyphenhyphenJQ9xXvwYZQJrBFAkvlYOY5n-Kvmpg5JAxB5yhd8KgrzdSw/s200/white+shirt+p.jpg" width="156" /></a></div>
<br /></div>
அதிரை.மெய்சாhttp://www.blogger.com/profile/07191876547261572485noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5299561821912104711.post-760461048808566522018-04-04T06:57:00.001+04:002018-04-04T07:57:32.307+04:00கலவரம்.!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நாளெல்லாம் பட்டினியாய் <br />
நகரெல்லாம் தீக்கிரையாய் <br />
பாவிகளின் வன்செயலால் <br />
பாரெல்லாம் கலவரமாய்<br />
<a name='more'></a><br />
<br />
கலவரம் மூள்வதாலே <br />
புலம்பெயர்வோர் ஏராளம்<br />
கலவரக் கார்களோ<br />
புதைகுழிக்குள் தாராளம்<br />
<br />
அமைதியாய் வாழ்ந்த மண்ணில் <br />
அரளிச்செடி முளைக்கிறதே <br />
அகதிகளாய் நம்மக்கள் <br />
அகிலமெங்கும் ஆயினரே<br />
<br />
பொறுமைக்கும் எல்லையுண்டு <br />
புதிருக்கும் விடையுண்டு <br />
வறுமைக்கு எல்லையுண்டோ<br />
நல் வாழ்வுக்கு வழியுண்டோ<br />
<br />
முந்தையநாள் மரணஓலம்<br />
மறையுமுன்னே மறு நிகழ்வா<br />
முகமூடி மனிதர்களின்<br />
முடிவுக்கிது மூலதனமா<br />
<br />
பச்சோந்தி மனிதர்களின் <br />
பகட்டான நடிப்பினிலே<br />
அப் பாவிமக்கள் அழிகிறதே <br />
பகுத்தறிவு சாகிறதே <br />
<br />
சாதியில்லை பேதமில்லை <br />
சமத்துவமே மனிதக் கொள்கை <br />
இதை யாருரைப்பார் எவர் கேட்பார் <br />
இத்தரணியிலொரு பிள்ளை<br />
<br />
<span style="color: #cc0000;">அதிரை மெய்சா</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7NaaCUZ-8vVK9L9mdgBS8pJ5U5pE-Bgt21ZRfPBibzty4XvcRSGzWR8DToF7_mcEird4HwI_qb1BYYy6ApTIPKhbZ5VJyUV1Lp7tVCKNDXNYo550z9W3a2ofIC8Hd_HuZ8czpMZOiM0A/s1600/white+shirt+p.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="758" data-original-width="594" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7NaaCUZ-8vVK9L9mdgBS8pJ5U5pE-Bgt21ZRfPBibzty4XvcRSGzWR8DToF7_mcEird4HwI_qb1BYYy6ApTIPKhbZ5VJyUV1Lp7tVCKNDXNYo550z9W3a2ofIC8Hd_HuZ8czpMZOiM0A/s200/white+shirt+p.jpg" width="156" /></a></div>
</div>
அதிரை.மெய்சாhttp://www.blogger.com/profile/07191876547261572485noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5299561821912104711.post-17144768727000672402018-03-29T06:42:00.001+04:002018-03-29T07:00:41.040+04:00மனித நேயத்தில் மருத்துவர்களின் பங்கு.!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று ஒரு பழமொழி நம் முன்னோர்கள் சொல்வார்கள்.ஒரு மனிதன் எவ்வளவுதான் பணம் பொருள் செல்வம் வசதி வாய்ப்பைப் பெற்றிருந்தாலும் சீக்கு பிணி இல்லாத வாழ்க்கையே சிறந்த வாழ்க்கையாகும்.<br />
<a name='more'></a>ஆனால் நாம் எவ்வளவுதான் பேணிப்பாக இருந்தாலும் ஏதாவது ஒரு வகையில் நமக்கு சிறிய அளவிலாவது சீக்குப்பிணிகள் ஏற்படுவதுண்டு. அப்போது நாம் பெரிதும் நம்புவதும், நாடுவதும் மருத்துவரைத்தான். மனித வாழ்வில் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களின் பங்கு என்பது மிக முக்கியமான ஒரு மனிதநேய பணியாகும். மருத்துவம் என்பது மக்களுக்கு செய்யும் மகத்தான சேவையாகும்.அச்சேவைப் பணியில் அங்கம் வகிப்பவர்களே மருத்துவர் ஆவார்கள். ஒரு நோயாளி கடவுளுக்கு அடுத்தபடியாக நம்பிக்கை வைத்து இருப்பது தனக்கு வைத்தியம் செய்யும் மருத்துவராகத்தான் இருக்கும்.<br />
<br />
அப்படிப்பட்ட பொறுப்புள்ள நம்பிக்கையுள்ள மிகச்சிறந்த மருத்துவப் பணியை மனசாட்ச்சியுடன் நேர்மையுடன் நடந்து பல உயிர்களைக் காப்பாற்றுவது ஒவ்வொரு மருத்துவரின் கட்டாயக்கடமையாக உள்ளது.இதற்க்கு விதிவிலக்காக ஒருசில மருத்துவர்களின் அலட்ச்சியப் போக்கால் உயிர்ப்பலி ஆவதும் உண்டு.அப்படியொரு சம்பவம் ஏற்படும்போது ஒட்டுமொத்த மருத்துவர்களுக்கும் அவப்பெயர் உண்டாகி விடுகிறது.<br />
<br />
மருத்துவப்பணியையும் ஒருவிதத்தில் இது ஒரு தியாகப் பணிக்கு ஒப்பானவை என்று கூடச் சொல்லலாம்.காரணம் எத்தனையோ பலவிதமான நோயாளிகள் வந்து சிகிச்சை மேற்கொள்வார்கள்.. அவர்கள் அனைவருக்கும் மனம் நோகாமல் பேசி அவர்களுடைய பிரச்சனை என்ன என்பதை பொறுமையுடன் கேட்டறிந்து அதற்க்கு தகுந்த சிகிச்சை அளிப்பது என்பது மருத்துவரின் கடமையாகிறது. அப்படி சிகிச்சை அளித்துக் கொண்டு இருக்கும்போது சிலசமயம் அவசர சிகிச்சைக்காக கவலைக்கிடமாக நோயாளியை அழைத்து வந்திருப்பார்கள். மருத்துவரின் சூழ்நிலை அறியாது அந்த உறவினரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அவசரப்பட்டு மருத்துவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவார்கள்.அந்த மாதிரி சூழ்நிலையில் மருத்துவர்கள் பொறுப்புடன் பொறுமையாகச் சொல்லும் ஆறுதல் வார்த்தைகளே அவர்களுக்கு நம்பிக்கையளிப்பதாக உள்ளது. அப்படி அவர்களுக்கு ஆறுதல் சொல்வதுடன் அந்த நோயாளிக்கு அவசர சிகிச்சை அளிக்க வேண்டும் இப்படி இக்கட்டான சூழ்நிலைகளும் மருத்துவர்களுக்கு வருவதுண்டு.இந்த மாதிரி சூழ்நிலையில் பொறுமையை கையாள்வதுடன் போதிய சிகிச்சையளிக்க வேண்டும்.அப்படியானால் இதுஒருவகை தியாகத்திற்கு நிகரானவையே என்றுதான் சொல்ல முடியும்.<br />
<br />
இப்படி எந்தக் கோணத்தில் பார்த்தாலும் மருத்துவப் பணியென்பது மற்ற மனிதநேய பணியைவிட ஒருபடி மேலோங்கி இதுஒருவகை தியாகத்திற்கு சமமானவையாகவே இருக்கிறது. <br />
<br />
அப்படி நம்பிக்கை வைத்திருக்கும் மருத்துவப் பணி இன்று வியாபார நோக்கோடு கையாள்வது மிக வேதனைதரக் கூடிய விசயமாக இருக்கிறது. உடல்நிலை பாதிப்பு சீக்குப்பிணி நோய்கள் ஏழை பணக்காரர்கள் என்று பாகுபாடு பார்த்து வருவதில்லை. ஆனால் நோய்வந்தவர்கள் எல்லா மருத்துவமனைக்கும் சென்று வைத்தியம் பார்த்துவிட முடிவதில்லை. காரணம் மருத்துவமனையை பொறுத்து கட்டணங்களும் இதர செலவுகளும் மாறுபடுகிறது. இப்படி மருத்துவம் தொழிலாக மட்டும் பார்க்கப்படுவதால் வசதியற்ற ஏழை
எளியோர்க்கு எட்டாக் கனியாகி சரியான வைத்தியம் கிடைக்காமல் மரணத்தை
தழுவுகிறார்கள். <br />
<br />
அதுமட்டுமல்ல அதைவிட பரிதாபம் குறிப்பிட்ட மருத்துவமனையின் பெயரைச் சொல்லி நான் இந்த மருத்துவமனையில் வைத்தியம் பார்க்கிறேன் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளும்படி மக்கள் மனதை ஒரு மோகத்தில் ஆக்கி பெரும்பணத்தை கட்டாய கட்டணமாக வசூல் செய்து கொண்டிருக்கிறார்கள். <br />
<br />
எப்படிப் பார்த்தாலும் எவ்வளவுதான் குறைகள் இருந்தாலும் மனித நேயப் பணிகளில் மருத்துவர்களின் பங்கு அளவிட்டுக் கூற முடியாத அளவில் உள்ளது. அதை மனதில் கொண்டு அப்புனிதமான மருத்துவப் பணியை தொழிலாக மட்டும் பார்க்காமல் அதனால் ஏற்படும் இன்னல்களையும் சிரமங்களையும் இன்முகத்துடன் ஏற்ப்பதுடன் காலநேரங்களையும் கணக்கில் கொள்ளாமல் சேவையாகவும் தியாக உணர்வோடும் மேற்கொண்டு சிறப்புறச் செய்து பல உயிர்களை நோய்களிலிருந்து மீட்டெடுத்து மனித நேயமிக்க நல் மருத்துவராக இவ்வுலக மக்கள் ஒவ்வொருவரின் மனதில் வாழும்படி உயர்ந்த நிலையிலிருந்து தானும் மகிழ்ந்து தனை நம்பும் மக்களையும் மகிழ்விப்பது ஒவ்வொரு மருத்துவர்களுக்கும் கடமையாகவும் பெரும்பங்காகவும் இருக்கிறது.<br />
<br />
<span style="color: #b45f06;">அதிரை மெய்சா </span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVVYAe7HbyCVINW9HCqN-r00VGiS7vx96aw2KLjyZ7dXwtI8zAIrSEZOUCu85vmHZnTB3xacLtdzgFEj7uHsuHOFpqRrvRrMMGzCX1vBJ1Czv17PG8gHY1fPcxx6xRcCaFjczAinH-e-A/s1600/white+shirt+p.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="758" data-original-width="594" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVVYAe7HbyCVINW9HCqN-r00VGiS7vx96aw2KLjyZ7dXwtI8zAIrSEZOUCu85vmHZnTB3xacLtdzgFEj7uHsuHOFpqRrvRrMMGzCX1vBJ1Czv17PG8gHY1fPcxx6xRcCaFjczAinH-e-A/s200/white+shirt+p.jpg" width="156" /></a></div>
<br /></div>
அதிரை.மெய்சாhttp://www.blogger.com/profile/07191876547261572485noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5299561821912104711.post-59531206019579599352018-03-17T06:52:00.000+04:002018-03-17T16:48:27.648+04:00சொந்த பந்தம். <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சொந்தபந்தம் என்பது இறைவன் இவ்வுலக வாழ்வில் நமக்கு வழங்கிய பெரும்பாக்கியமாகும். மனித வாழ்வில் மிக அவசியமான நம்முடன் பின்னிப் பிணைந்து சங்கிலித் தொடராய் வந்து கொண்டிருக்கும் உறவாகும்.நம் பிறவி தந்தை என்ற உறவின் மூலமாக தாய் என்ற உறவை தாங்கிப் பிடித்துக் கொண்டுதான் இவ்வுலகை கண்டோம். மனிதர்கள் இவ்வுலகில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து தனது வாழ்வு முடியும் வரை ஏதாவது ஒருவகை சொந்த பந்தங்களை சார்ந்தே வாழ்ந்து வருகின்றனர். அதுவே உலக நியதி.<br />
<a name='more'></a><br />
<br />
அதன் தொடர்ச்சியாக பிறகு அண்ணன்,தம்பி,அக்கா,தங்கை, மாமன், மச்சான், என்று இன்னும் ஏராளமான பல உறவுமுறைகளை பெற்று இவ்வுலக வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம்.<br />
<br />
எத்தனை கோடிக்கு அதிபதியாக இருந்தாலும் மலைபோல் செல்வம் குமிந்து கிடந்தாலும் இப்படி ஒரு சொந்தபந்த உறவுகள் இல்லாமல் போய்விட்டால் இவ்வுலக வாழ்க்கையில் சந்தோஷமோ, மகிழ்வோ, சுகமோ,மனநிம்மதியோ இருக்காது. அது ஒரு வாழ்க்கையாகவே தெரியாது. நடுத்தர குடும்பமாக இருந்தாலும் நாலு உறவு முறைகளைக் கொண்டவர்களிடம் இருக்கும் சந்தோஷமும் மகிழ்வும் தைரியமும் ஆதரவும் அரவணைப்பும் கோடிக் கோடியாய் கொடுத்தாலும் கிடைக்காது. இன்னும் சொல்லப் போனால் எத்தனை கோடிரூபாய் கொடுத்தாலும் இயற்கையாக அமையும் இத்தகைய சொந்தபந்தங்களை விலைகொடுத்து வாங்க முடியாது.<br />
<br />
இப்படி இயற்கையாக இப்புவியில் இறைவன் நமக்கு ஏற்படுத்தித் தந்த நமது சொந்தபந்தங்களை உறவுமுறைகளை சிலர் அற்ப பிரச்சனைகளுக்காகவும் சின்னஞ்சிறு மனஸ்தாபங்களுக்காகவும் பிரிந்து போகிறார்கள்.எதிரியாக்கிக் கொள்கிறார்கள்.சொந்த பந்தங்களை இழந்து நிற்கிறார்கள். இது நம் வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் நிம்மதியை கொடுக்காது.இது நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் மிகப்பெரிய இழப்பாகும்.<br />
<br />
இத்தனை சொந்தபந்தங்களுடன் பிறந்து வளர்ந்து ஒரு கட்டத்தில் தனிமைப்பட்டு போவது நம் வாழ்நாள் முழுதும் மனதளவில் அனுபவிக்கும் மிகப்பெரிய வேதனையாகும்.இன்னும் சொல்லப் போனால் சொந்தபந்தங்களுடன் சுமூக உறவில் இருக்கும் போது ஏற்படும் சந்தோஷமும் செழிப்பும் மகிழ்வும் எத்தனைதான் சொத்துசுகம் இருந்தாலும் கிடைக்காது என்பதே உண்மையாகும்.<br />
<br />
ஆகவே இவ்வுலக வாழ்வில் ஒருமுறையே நமக்கு வந்து விட்டுப் போகும் நமது உறவுமுறைகளை சொந்தபந்தங்களை தக்கவைத்து அரவணைத்துக் கொண்டு இவ்வுலக வாழ்க்கையை செழிப்புடனும் நிம்மதியுடனும் மகிழ்வுடனும் வாழ்ந்து விட்டு இவ்வுலகிலிருந்து விடைபெறுவோமாக.!!!<br />
<br />
<span style="color: cyan;"><b>அதிரை மெய்சா </b></span><br />
<span style="color: cyan;"><b> </b></span> <br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4o4SvK1QjDK2s-9PhbEMbJHvTvxSBD2RjbXSmix8j7qVPOIsJjBh0wrMz66zJC3MuA5SdjFIQoo1lEJFA-3NW3q_daee4KwAQNMlRbx39ZrVEMXQqnd_4hcIq36iYC-dGtIiXCfL7vJQ/s1600/white+shirt+p.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="758" data-original-width="594" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4o4SvK1QjDK2s-9PhbEMbJHvTvxSBD2RjbXSmix8j7qVPOIsJjBh0wrMz66zJC3MuA5SdjFIQoo1lEJFA-3NW3q_daee4KwAQNMlRbx39ZrVEMXQqnd_4hcIq36iYC-dGtIiXCfL7vJQ/s200/white+shirt+p.jpg" width="156" /></a></div>
<br /></div>
அதிரை.மெய்சாhttp://www.blogger.com/profile/07191876547261572485noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5299561821912104711.post-75007134825613449682018-03-05T07:24:00.001+04:002018-03-06T07:30:37.781+04:00யார் ஏழை .!?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஓலைக் குடிசையாயினும்<br />
உனதென்று சொந்தமாய்<br />
ஒருவேளைக் கஞ்சி குடித்து <br />
நிம்மதிப் பெருமூச்சில் <br />
நெஞ்சு நிமிர்த்தி நடக்கும்<br />
நீயா ஏழை<br />
<a name='more'></a><br />
<br />
வேங்கையாய் வெகுண்டெழுந்து<br />
வீதி வீதியாய் அலைந்து திரிந்து<br />
கிடைத்த வேலையை<br />
கடவுளாய் மதித்துச் செய்யும் <br />
நீயா ஏழை<br />
<br />
உடலை உழைப்பிற்குக் கொடுத்து<br />
உணர்வை உறவிற்குக் கொடுத்து<br />
ஊனமில்லா உனது வாழ்வில் <br />
உற்சாகமாய் என்றும் திகழும்<br />
நீயா ஏழை<br />
<br />
ஏழை யாரெனில்<br />
<br />
கோடிகோடியாய்ப் பணமிருந்தும் <br />
மாடமாளிகை ஆயிரமிருந்தும் <br />
கொஞ்ச நேரம் கண்ணயர<br />
கொஞ்ச உணவு தான் உண்ண <br />
கெஞ்சி நிற்பர் மருத்துவரை<br />
அவர்தான் ஏழை<br />
<br />
ஊராரைக் கொள்ளையடித்து <br />
உல்லாசமாய் வாழ நினைத்து<br />
ஊரிழந்து உறவிழந்து <br />
உலகமே காரியுமிழ்ந்து <br />
நடைபிணமாய் வாழ்பவரே<br />
ஏழை<br />
<br />
ஆட்சியாலும் அதிகாரத்தாலும் <br />
அகந்தையுடன் நடந்து விட்டு <br />
மாற்றம் வந்து மனம் திருந்தி <br />
வருந்தி வருந்தி நோகுபவர்களே<br />
ஏழை<br />
<br />
ஏழையென்று ஏளனச்சொல் <br />
ஏதுமில்லை இவ்வுலகில் <br />
பரந்தமனம் படைத்த நல்லோர் <br />
பாரினிலே பணக்காரர் ஆவார்<br />
<br />
<br />
<span style="color: #e06666;">அதிரை மெய்சா</span> <br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUPbbgUrpabIf2Jp2J1bKhjMMsFp5HEhIjwp03vkXgs2K2QObSJDmqr9-KF69mfhn7enive1sZFxGaS4r3W6-UQHRJLEv6nDpJL8craVtQi_vc3tck-yI947luRDJSbUOiJPkvm-zqkD8/s1600/MMYSHA.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="360" data-original-width="404" height="285" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUPbbgUrpabIf2Jp2J1bKhjMMsFp5HEhIjwp03vkXgs2K2QObSJDmqr9-KF69mfhn7enive1sZFxGaS4r3W6-UQHRJLEv6nDpJL8craVtQi_vc3tck-yI947luRDJSbUOiJPkvm-zqkD8/s320/MMYSHA.png" width="320" /></a></div>
<br />
<br />
<br />
<br />
<br /></div>
அதிரை.மெய்சாhttp://www.blogger.com/profile/07191876547261572485noreply@blogger.com0Adirampattinam, Tamil Nadu, India10.3413175 79.37964529999999310.278834 79.2989643 10.403801000000001 79.460326299999991tag:blogger.com,1999:blog-5299561821912104711.post-63931008396270712742018-03-03T12:02:00.000+04:002018-03-04T06:10:44.155+04:00புரையோடிக்கொண்டிருக்கும் பாலியல் கேவலங்கள்.!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒருபுறம் கல்வியறியும் நாகரீகமும் நவீனமும் முன்னேறி பெருகிக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் இன்னொருபுறம் பெண்கள் சிறுமியர்கள் மீதான பலாத்காரமும் பாலியல் கேவலமும் பெருகிக்கொண்டு போவதுதான் பரிதாப நிலையாக உள்ளது. அதிலும் சில சம்பவங்கள் நாம் கேள்விப்படும் போது ஜீராணிக்கவே முடியவில்லை. மனசாட்சியே இல்லாமல் சிறுமியென்றும் பாராமல் கூட்டு பாலியல் பலாத்காரம் கொஞ்சம்கூட ஐயப்பாடு இல்லாமல் கொடூரமான முறையில் நடப்பதை நினைத்தால் இம்மனித நாகரீகம் பல வருடத்திற்கு பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.<br />
<a name='more'></a><br />
<br />
அது மட்டுமல்லாது திருமணமாகி குழந்தை குடும்பமென வாழ்க்கையில் சந்தோசமாக இருக்கும் பல குடும்பங்களிலும் இந்த பாலியல் புரையோடி பல குடும்பத்தை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறது. கணவன் இருக்கும்போதே அடுத்த ஆடவரின் நாட்டமும் மனைவி இருக்கும்போதே அடுத்த பெண்களுடன் தொடர்பும் வைத்துக் கொண்டு அற்ப ஆசைக்காக அவப்பெயருடன் மானம் மரியாதையை இழந்து சமூகத்தார் மத்தியில் தலைகுனிவு ஏற்படும் சூழ்நிலைக்கு சிலர் தள்ளப்படுகிறார்கள். <br />
<br />
இப்படியான தவறுகள் பெருகிக் கொண்டுபோக காரணம் என்ன.? ஏன் மனித மனத்தின் மனசாட்சி மலிந்து கேவலமாகிக் கொண்டிருக்கிறது.? இதைப்பற்றி சற்று சிந்தித்து பார்ப்போம்.இப்படியான பாலியல் தவறுகளுக்கு பலதரப்பு காரணங்கள் இருக்கின்றன. அவையாதெனில் சுருக்கமாகச் சொன்னால் வாழ்க்கையின் தேவைகளை தேடுதல்களை சிரமமில்லாமல் விஞ்ஞான கண்டுபிடிப்பு நவீன வசதிகளைக் கொண்டு ஒரு குறுகிய வட்டத்திற்குள் மனிதன் வாழத் துவங்கிவிட்டான்.சற்று யோசித்துப் பார்த்தோமேயானால் இதுதான் அடிப்படை காரணமாக இருக்கும் என்பது புரியும்.<br />
<br />
குறுகிய வட்ட வாழ்க்கை என்பது உடல் உழைப்பும் சிரமங்களும் குறைந்து எதுவும் எளிதாக கிடைக்கும் வகையில் எல்லாம் கைக்கெட்டும் தூரத்தில் கிடைத்து விடுவதாகும். இப்படி கிடைக்கும்போது அம்மனிதனுக்கு அதன் மதிப்போ கஷ்டமோ தெரிவதில்லை.நவீனத்தின்பால் மனம் மூழ்கி தான் அச்சப்பட்டவைகளும் வெட்கப்பட்டவைகளும் விரும்பும் நேரத்தில் கிடைப்பதால் மனசாட்சி,மனிதநேயம்,உறவுமுறை,பாசம்,நேசம் ஆகியவை தூரமாகி விடுகின்றன. ஒருகாலத்தில் செக்ஸ் என்பது அந்தரங்க விஷயமாக நாணப்படும்படி ரகசியமாக இருந்தது.ஆனால் இன்றைய நாகரீக காலத்தில் பல தகவல் தொடர்பு சாதனங்கள் வந்தபிறகு அது இலகுவாக்கப்பட்டு சந்தைப் பொருள்போல் ஆகிவிட்டது. இன்றைய நாகரீக காலப் போர்வையில் வெட்கப்பட்டவைகளெல்லாம் வெட்டவெளிச்சமாகி வீதிக்கு வந்து விட்டது. எனவே பாலியல் என்பது பயமோ கூச்சமோ வெட்கமோ இல்லாமல் நடத்துவதற்கு மனித மனம் துணிந்து விட்டது என்று சொல்லலாம்.<br />
<br />
உதாரணத்திற்கு சொல்லப் போனால் ஒருகாலத்தில் தகவல் தொடர்பு என்பது கடிதம் எழுதுவது மூலமாக மட்டுமாகவே இருந்தது.பதில் கடிதம் வரும்வரை எதிர்பார்ப்புடன் காத்திருப்போம். அப்போது இருந்த அந்த மகிழ்வும் சந்தோஷமும் இப்போது நமக்கு அந்த உணர்வு யாருக்கும் இருப்பதாக தெரியவில்லை. இப்படித்தான் ஒவ்வொரு விஷயங்களிலும் நவீனங்கள் புகுந்து எல்லாம் இலகுவாக்கப்பட்டு மனித மனம் மழுங்கடிக்கப்பட்டு தூங்கிக்கிடந்த உணர்வுகளுக்கு துணிச்சல் கொடுத்து பின் விளைவுகளை யோசிக்காமல் தவறிழைக்க வைக்கிறது. <br />
<br />
நவீனத்தால் நாகரீகம் முன்னேறிப் போய்க்கொண்டிருந்தாலும் அதே நவீனத்தால் மனிதனது செயல்பாடுகள் அழிவுப்பாதையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லமுடியும்.இதற்க்கு தீர்வு என்னவெனில் நவீனத்தில் இருக்கின்ற நல்லவைகளை மட்டும் எடுத்துக் கொண்டு மனக்கட்டுப்பாட்டுடன் நடந்தோமேயானால் அவர்களை எத்தனை நவீனங்கள் வந்தாலும் ஒன்றும் செய்ய இயலாது. இதிலிருந்து தப்பித்து மீள்பவர்களே திறமைசாலிகள் வாழ்க்கையில் வெற்றியாளர்கள் ஆவார்கள்.<br />
<br />
<span style="color: orange;">அதிரை மெய்சா </span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBHGIjGYQJfkZfxNnBWtiSD3_C0nitG5NC0Ou9ItB4V9bip1I0Jfwrcoky0XpD2OwRrYTYdpw9JHvljJW3soU8rtwhblBdP_AhyFbPCSaOvNJ4BBbKV0lThroKP7nJ1QUklGsUtF_iyZs/s1600/MMYSHA.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="360" data-original-width="404" height="285" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBHGIjGYQJfkZfxNnBWtiSD3_C0nitG5NC0Ou9ItB4V9bip1I0Jfwrcoky0XpD2OwRrYTYdpw9JHvljJW3soU8rtwhblBdP_AhyFbPCSaOvNJ4BBbKV0lThroKP7nJ1QUklGsUtF_iyZs/s320/MMYSHA.png" width="320" /></a></div>
</div>
அதிரை.மெய்சாhttp://www.blogger.com/profile/07191876547261572485noreply@blogger.com1India20.593684 78.962880000000041-8.6044825 37.654286000000042 49.791850499999995 120.27147400000004tag:blogger.com,1999:blog-5299561821912104711.post-90487502672792573472018-03-01T07:09:00.003+04:002018-03-01T07:11:43.101+04:00என்னமோ நடக்குது மர்மமா இருக்குது.!!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நாம் ஒவ்வொரு மனிதனும் இப்புவியில்தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்புவியில் சிலர் ஏழைக் குடும்பத்தில் பிறந்திருப்பர். சிலர் நடுத்தர குடும்பத்தில் பிறந்திருப்பர். இன்னும் சிலர் பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்திருப்பர். பிறவி எப்படி இருந்தாலும் அவரவர் வசதி வாய்ப்புக்குத் தகுந்தவாறு தன் தேவைகளை பூர்த்தி செய்துகொண்டு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு அவரவர் தரப்பில் மகிழ்வோடு தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.இதில் யாதொரு சந்தேகமும் இல்லை.<br />
<a name='more'></a><br />
<br />
ஆனால் இம்மனிதன் காலப்போக்கில் அவனது செயல் அவனது வாழ்க்கை முறை வசதி வாய்ப்பு செய்யும் தொழில் இவற்றின் அடிப்படையில் வேற்றுமை ஏற்ற தாழ்வு கண்டு பிளவு பட்டுப் போய் விட்டான்.இப்படி ஏற்பட்ட விரிசலால் தான் இன்றைக்கு அரசியலாகட்டும்,ஆன்மீகமாகட்டும் யாவற்றிலும் உண்மை நேர்மை இல்லாமல் இன்று மனித குலம் அழிவுப்பாதையில் பயணித்துக் கொண்டு இருக்கிறது.<br />
<br />
இதற்க்கு இன்றைய காலகட்டத்தில் இவ்வுலகில் நடந்து கொண்டிருக்கும் மனித நேயமற்ற பல சம்பவங்களே சாட்சியாக இருக்கின்றது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டும் இரக்கமில்லா அரக்கனாக கொலைப் பாதகங்கள் செய்து கொண்டும் ஒருவருக்கொருவர் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டும் உண்மை நேர்மையை எல்லாம் குழிதோண்டி புதைத்துக் கொண்டும் இப்படியான செயல்கள் செய்து மனித குலத்தை மடிய வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.<br />
<br />
இவ்வுலக வாழ்க்கை அற்பமானது.நிலையில்லாதது. எதை கணித்துச் சொன்னாலும் எந்த நேரத்தில் யார் மரணிப்பார்கள் என்று யாரும் கணித்துச் சொல்ல முடியாது. இந்த சொற்ப வாழ்க்கைக்குத்தான் இம்மனித இனத்திற்குள் இவ்வளவு போராட்டமா.? இதையெல்லாம் ஒவ்வொரு மனிதனும் சற்று சிந்தித்துப் பார்த்தாலே போதும்.மனிதம் தழைத்து நிற்கும். இவ்வுலகில் நாம் வாழும்வரை ஒருவரை ஒருவர் புரிதலுடன் பரிவுடன் இரக்கமுடன் அன்புடன் நேசத்துடன் விட்டுக் கொடுக்கும் மனப்பாங்குடன் வாழ்ந்தோமேயானால் வறுமையும், பேராபத்துக்களும், குழப்பங்களும் நீங்கி மீதமிருக்கும் காலம்வரை நலமுடனும் மகிழ்வுடனும் வாழ்ந்து நம் சன்னதிகளும் மகிழ்வுடன் வாழ வழிசெய்து வைத்துவிட்டு நாம் சந்தோசத்துடன் இவ்வுலகிலிருந்து விடை பெறலாம்.<br />
<br />
<b><span style="color: blue;">அதிரை மெய்சா</span></b><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJREUpGee88CoZNvOBoJeAbQwbETksbujujvzNPGPIkNFG6VZxR7qSvUNhvdPndxU1uCR1fjWsRe7msZXhf2sOVMod9SEB7lwXlGOY0vrf2W6jUkfxK0ihkOIfwri0x1ctoT2ms1lgQXQ/s1600/MMYSHA.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="360" data-original-width="404" height="285" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJREUpGee88CoZNvOBoJeAbQwbETksbujujvzNPGPIkNFG6VZxR7qSvUNhvdPndxU1uCR1fjWsRe7msZXhf2sOVMod9SEB7lwXlGOY0vrf2W6jUkfxK0ihkOIfwri0x1ctoT2ms1lgQXQ/s320/MMYSHA.png" width="320" /></a></div>
<br />
<br />
<br /></div>
அதிரை.மெய்சாhttp://www.blogger.com/profile/07191876547261572485noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5299561821912104711.post-27250126226761577152015-12-14T13:40:00.002+04:002015-12-14T13:54:51.534+04:00காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா..!?!?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
காசைக்
கடவுளுடன் ஒப்பிட்டு பேசும் அளவுக்கு காசு பணம் மிக அத்தியாவசியமானதுடன்
இன்றைய காலகட்டத்தில் இவ்வுலகில் காசிருந்தால் எதையும் வாங்கிவிடலாம் என்ற
எண்ணமும் மேலோங்கிக் கொண்டிருக்கிறது.மனிதன் மானத்துடனும்
சுயமரியாதையுடனும் கௌரவத்துடனும் வறுமை இல்லாமலும் வாழ்வதற்கு காசு பணம்
மிக மிக முக்கியமானதாகும்.மறுப்பதற்கில்லை.அதேசமயம் நாகரீகமும் <br />
<a name='more'></a>நவீனங்களும்
தலை தூக்கிய பின்பு இன்றைய சூழ்நிலையில் பணத்தேவைகள் ஒவ்வொரு மனிதனுக்கும்
பன்மடங்கு கூடிவிட்டன.நாணயத்தின் மதிப்பும் நாளுக்கு நாள் நலிந்து
கொண்டிருப்பதால் நம்தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள பெருந்தொகை
தேவைப்படுகிறது என்பது என்னவோ உண்மைதான் அதுபோல இந்த சூழலில் காசு பணம்
இருந்தால் எதையும் வாங்கிவிடலாம் என்கிற எண்ணம் ஒவ்வொருவரிடத்திலும்
மேலோங்கிக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மையே.! <br />
<br />
காசிருந்தால்
எதையும் வாங்கிவிடாலாம் என்று சொல்வதற்கு பொருத்தமாக இன்றைய காலகட்டத்தில்
நடக்கும் பல சம்பவங்களை உதாரணங்களாகச் சொல்லலாம்.அதில் முதலாவதாக
சொல்லப்போனால் ஒருமனிதனின் குணம், குடும்பம்,கோத்தரம்,
பழக்கவழக்கம்,நடவடிக்கை,செயல், சமுதாயத்தார் மத்தியில் உள்ள பெயர் புகழ்
இதை பார்த்து மதித்த காலம்போய் இப்போதைய காலகட்டத்தில் பணக்கார்களையும்,
பெரும் செல்வந்தர்களையும் மதிக்கும்
காலமாக பணக்காரர்களுடன் பழக்கவழக்கம் வைத்துக் கொள்வதையும் அவர்களை தனது
நண்பர்களாக சொல்லிக் கொள்வதையும் கௌரவமாகவும் பெருமையாகவும்
நினைக்கிறார்கள். சுருக்கமாகச் சொல்வதானால் மனிதர்களை மதிப்பது என்பது
அவனது காசுபணத்தை வசதிவாய்ப்பை பொருளாதாரத்தை வைத்தே
தீர்மானிக்கப்படுகிறது.<br />
<br />
அடுத்து இதில் பெரும்கொடுமையும்
வேதனைப்படக்கூடிய விஷயம் என்னவென்று சொன்னால் பணக்காரர்கள் செய்யும் பெரிய
தப்புக்கள்,குற்றங்கள் கூட சிலசமயத்தில் நியாயமாக்கப்பட்டு அவர்களுக்கு
சாதகமாக பேசப்படுகிறது. அதே தவறை ஒரு சாதாரண நடுத்தர மனிதன் செய்தால் அதை
பெரும்குற்றமாக கருதப்படுகிறது.அப்படியானால் அந்த சூழ்நிலையில் காசுபணம்
உள்ளவர்களை பொருத்தமட்டில் காசுபணம் இருப்பதால் செல்வந்தர்களாக இருப்பதால்
எல்லாவற்றையும் வாங்கிவிடலாம் எல்லாவற்றையும் சாதித்து விடலாம்
என்பதாகத்தானே அர்த்தமாகிறது.? <br />
<br />
அடுத்து பார்ப்போமேயானால் காசுபணம்
கைநிறைய வந்தவுடன் சிலர் தனது கடமைகளை செய்ய மறந்துவிடுகிறார்கள்.
பெற்றோர்களை உடன்பிறந்தோர்களை உறவினர்களை சிறுவயதில் வறுமையில் இருந்தபோது
பழகிய நண்பர்களை இப்படி நெருங்கிய கடமைப்பட்டவர்களைக் கூட மறந்து
விடுகிறார்கள். எத்தனைதான் காசிருந்தாலும் உண்மையான அன்பு பாசத்தையும்
இரத்தபந்த உறவுகளையும் உண்மையான உயிர் நட்புக்களையும் எத்தனைகோடியை அள்ளிக்
கொடுத்தாலும் வாங்கிட முடியுமா.? ஆனால் அதை காசைவிட்டு எறிந்தால் எல்லாம்
வாங்கிட முடியும் என நினைக்கிறார்கள்.இப்படி அடுக்கடுக்கான
குற்றச்சாற்றுடன் பல உதாரணங்களை சொல்லிக் கொண்டு போகலாம்.<br />
<br />
எனவே
இப்படியான குற்றச்சாற்றுகளுக்கு நாம் ஆளாகிவிடாமல் இறைவன் நமக்கு
காசுபணத்தை தாராளமாக தரும்போது நமக்குள் தன்னடக்கமும் தாராள குணமும்
பிறரையும் சமமாக மதிக்கும் பரந்த மனப்பான்மையும், நல்லெண்ணமும்
வளரவேண்டும். ஒன்றைமட்டும் நன்றாக புரிந்து கொள்ளவேண்டும். இவ்வுலகில்
நாம்மட்டுமல்ல இந்த காசுபணமும் யாருக்கும் நிலையானது அல்ல. அது எந்த
நேரத்திலும் ஏதாவது ஒரு ரீதியில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் நம்மைவிட்டு
போய்விடலாம். ஆகையபடியால் அது நம்மிடத்தில் இருக்கும்போது இந்தக்
காசுபணத்தை எப்படி நல்வழியில் நாம் செலவு செய்யப்போகிறோம் என்கிற பயம்தான்
மனதில் வரவேண்டுமேயன்றி திமிர்த்தனம் இம்மியளவும் வந்துவிடக் கூடாது.
காசுபணம் இருக்கிறது என்கிற மமதையில் நாம் செய்யும் தவறுகளால் அந்தக்
காசுபணம் ஒருநொடியில் காணாமல்போய் விட வாய்ப்பு உள்ளது. எனவே காசுபணம்
எவ்வளவுக்கு அவசியமானதாக இருந்தாலும் அதை கடவுளுக்கு நிகராக மதித்து
விடக்கூடாது. அதனைக் கொண்டு எல்லாவற்றையும் வாங்கிவிடலாம் என்கிற எண்ணம்
துளிகூட மனதில் வளர்ந்து விடக் கூடாது. <br />
<br />
ஆகவே நாம் எத்தனை
கோடிக்குச் சொந்தக்காரர்களாக இருந்தாலும் இந்த காசுபணமும் பகட்டான
வாழ்க்கையும் நிலையானது அல்ல என்பதை உணர்ந்திட வேண்டும். இதைவிட நிலையானவை
நாம் செய்யும் நற்காரியங்களிலும் பிறரை மதித்து நடப்பதிலும் தானதர்மம்
செய்வதிலும் பிற நல்ல செயல்பாட்டிலும் தான் இருக்கிறது என்கிற
நம்பிக்கையுடன் இறைவனின் பயமும் நம்பிக்கையும் வந்து விட்டால் காசுபணத்தைக்
கொண்டு இவ்வுலகில் நாம் நினைத்தது எல்லாவற்றையும் வாங்கிவிட முடியாது
என்கிற எண்ணம் மனதில் துளிர்விட்டு வளர்ந்து தன்னம்பிக்கையுடன் தலைக்கனம்
இல்லாத நேர்மையான வாழ்க்கை வாழ வழிவகுக்கும் என்பதில் யாதொரு சந்தேகமும்
இல்லை.<br />
<br />
<br />
<br />
<div>
<div style="text-align: center;">
<span style="color: #e69138;"><b>அதிரை மெய்சா</b></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuAgGoXB64fLFNnikNpntVHt1SF8OOr5mHuQeCArGFMnVk9vdteeh9GTFRRMSCzk6iyTchaGz6kTy3CwaNP0aYVvFsQgJpfUnRZNUlSVIVa2H1Uld5wNYjUXq9hAVOV-ySrvhu5nTggd0/s1600/IMG-20150119-WA0001.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="80" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuAgGoXB64fLFNnikNpntVHt1SF8OOr5mHuQeCArGFMnVk9vdteeh9GTFRRMSCzk6iyTchaGz6kTy3CwaNP0aYVvFsQgJpfUnRZNUlSVIVa2H1Uld5wNYjUXq9hAVOV-ySrvhu5nTggd0/s1600/IMG-20150119-WA0001.jpg" width="80" /></a></div>
</div>
</div>
அதிரை.மெய்சாhttp://www.blogger.com/profile/07191876547261572485noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5299561821912104711.post-62955285628019521182015-11-19T07:03:00.001+04:002015-11-19T07:12:06.295+04:00ஊருக்கு மட்டும்தான் உபதேசமா.!?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
பெரும்பாலும்
நமதூர் பகுதிகளில் நாம் அனுதினமும் ஒருசிலரை பார்த்திருப்போம். வாய்
ஓயாமல் அடுத்தார்களுக்கு ஏதாவது ஒரு உபதேசம் சொல்லிக் கொண்டே
இருப்பார்கள்.உபதேசம் செய்வது ஒருவகையில் நல்ல விஷயம்தான்.மறுப்பதற்கில்லை.
அதேசமயம் யாரொருவர் பிறருக்கு உபதேசம் செய்கிறார்களோ அந்த நபரும்
ஓரளவுக்கு அவ்விசயத்தில் சரியாக கடைப்பிடித்து நடப்பவர்களாக
இருக்கவேண்டும்.தாம் அந்த விசயத்தில் சரியாக இல்லாமல் அடுத்தவர்களுக்கு
மட்டும் உபதேசம் செய்வாராயின் அதை யாரும் பெரும்பொருட்டாக எடுத்துக்
கொள்ளமாட்டார்கள்.அவரை யாரும் மதிக்கமாட்டார்கள். மேலும் பல
இழிவுச்சொல்லுக்கே ஆளாவார்கள். <br />
<a name='more'></a><br />
<br />
இன்னும் சொல்லப்போனால் சிலர் வாய்
கிழிய பொதுக்கூட்டங்களில் விழா நிகழ்ச்சிகளில் பல நல்லுபதேசங்கள் சொல்லி
மிகச் சிறப்பாக சொற்ப்பொழிவாற்றுவார்கள். ஆனால் அவர்களின் சொந்த
வாழ்க்கையில் இதற்க்கு நேர்மாறாக நடப்பவராக இருப்பார்கள். இவர்
சொற்ப்பொழிவில் நல்ல விஷயங்ககள்,பல உண்மைகள்,நன்மைகள் இருந்தாலும் இவர்
சொல்லியா நாம் கேட்பது சொல்பவரை முதலில் சரியாக நடக்கச் சொல்லுங்களென
விமரிசனம் செய்து அவருடைய பேச்சை அலட்சியப்படுத்திவிடுவார்கள்.
அப்படியானால் அடுத்தவர்களுக்கு மட்டும் உபதேசம் செய்து என்ன இலாபம்
இருக்கிறது.? சற்று சிந்திக்கவேண்டும். <br />
<br />
இதுபோல் அடுத்தவர்களுக்கு
உபதேசிப்போர் தன்னிலையில் சரியாக இல்லாத எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு பல நிகழ்வுகளை சுட்டிக் காட்டலாம்.சில அரசியல்வாதிகள்
எத்தனையோ ஊழல் மோசடி போன்ற குற்றங்களை தாமும் செய்துவிட்டு அடுத்தவர்களின்
மோசடியையும் ஊழலையும் பட்டியலிட்டு காண்பித்து உரத்தகுரலில் மக்களுக்கு
எடுத்துரைத்து உபதேசம் செய்து கொண்டிருப்பார்கள்.சில மருத்துவர்கள்
புகைபிடித்தல் மது அருந்துதல் கூடாது. உடல் நலத்திற்கு தீங்கானது.அதனை
விட்டுவிடுங்கள் என்று நோயாளிக்கு அறிவுரை வழங்கிவிட்டு அந்த மருத்துவர்
அந்த பழக்கம் உள்ளவராக இருப்பார். சில அதிகாரிகள் லஞ்சம் வாங்கக் கூடாது என
கெடுபிடியாக பேசிவிட்டு தனக்கு கீழ் பணிபுரியும் அதிகாரியின் உதவியுடன்
லஞ்சம் பெற்றுக் கொள்வார். அது போல் சில ஆசிரியர்கள் மாணவ மாணவியர்களுக்கு
புத்திமதி சொல்லிவிட்டு தமது சொந்த வாழக்கையில் அராஜகப் போக்குடன் ஈவு
இரக்கமில்லாமல் தன்னிடம் பயிலும் மாணவ மாணவிகளிடமே பலாத்காரம், வன்புணர்வு
போன்ற பெரும் தவறான குற்றப்போக்கை கையாழ்வார்.சில ஆன்மீகவாதிகள் பக்திப்
பரவசத்துடன் கடவுளின் பெயரைச் சொல்லி காசுசம்பாதிப்பதுடன் கடவுளுக்குப்
பிடிக்காத எல்லா செயலையும் செய்வார்கள். இப்படி தவறென தெரிந்தும் தப்பு
செய்யும் இவர்கள் ஏன் அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும்.?<br />
<br />
கல்வி
பகுத்தறிவு உலக அறிவு எதையும் அறிந்திடாத மனிதர் கூட மனிதனாய்
பிறந்திருப்பதால் அறிவுடன் யோசித்து கொஞ்சமாவது சிலவிசயங்களில் புரிந்து
நடந்து கொள்வார்கள். ஆனால் நீண்ட உரை நிகழ்த்தி நல்லுபதேசம் வழங்கும்
திறமைசாலிகள், படித்தவர்கள், அனுபவமிக்கவர்கள்,அனைத்து விசயங்களையும் நன்கு
அறிந்தவர்கள் சிலரை பார்ப்போமேயானால் ஒன்றுமறியாத நபரிடம் இருக்கும் அந்த
மனசாட்சிகூட இல்லாத அளவுக்கு நடந்து கொள்வார்கள். இப்படி இருப்பவர்கள்
அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்து என்ன பயன்.? உபதேசம் செய்ய என்ன தகுதி
இருக்கிறது.?<br />
<br />
ஆக இன்றைய நிலையில் அரசியல்வாதிகளாகட்டும், ஆன்மீகவாதிகளாகட்டும் சிறந்த
பேச்சாளராகட்டும் பெரும்பாலும் ஊருக்கு உபதேசம் செய்பவர்களாகத்தான்
இருக்கிறார்களே அன்றி. தனது சொந்த வாழ்வில் கடைப்பிடித்து நடப்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளனர்
என்பதை நாம் பல சம்பவங்களின் மூலம் அறியமுடிகிறது. <br />
<br />
இறுதியாக
சொல்லப்போனால் தவறு செய்யாத மனிதன் இவ்வுலகில் யாரும் இருக்க முடியாது.
ஆனால் தவறென்று தெரிந்திருந்தும் தன்னை திருத்திக் கொள்ளாதவன் மனிதனாய்
இருக்க முடியாது. எது தவறு எது சரி என்கிற விபரம் தெரிந்தவர்கள் வயது
வரம்பு இல்லாமல் அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்யலாம். அதில் தவறில்லை.
அதேசமயம் அப்படி உபதேசம் செய்பவர்கள் அதன்படி தானும் தனது நடைமுறை
வாழ்க்கையில் சரிவர நடந்து கொள்ளவேண்டும் என்பதையே இக்கட்டுரை
வலியுறுத்துகிறது. எனவே ஊருக்குமட்டும்தான் உபதேசம் என்ற போக்கைவிட்டு
தனக்குத் தெரிந்ததை நாம் தாராளமாக பிறருக்கு உபதேசம் செய்வதோடு அதன்படி
நாமும் நமது நடைமுறைவாழ்வில் சரிவர நடந்து சமுதாய மக்கள் முன் நன்மதிப்பை
தேடிக்கொள்வோம். !!!<br />
<br />
<br />
<div>
<div style="text-align: center;">
<span style="color: #e69138;"><b>அதிரை மெய்சா</b></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuAgGoXB64fLFNnikNpntVHt1SF8OOr5mHuQeCArGFMnVk9vdteeh9GTFRRMSCzk6iyTchaGz6kTy3CwaNP0aYVvFsQgJpfUnRZNUlSVIVa2H1Uld5wNYjUXq9hAVOV-ySrvhu5nTggd0/s1600/IMG-20150119-WA0001.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="80" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuAgGoXB64fLFNnikNpntVHt1SF8OOr5mHuQeCArGFMnVk9vdteeh9GTFRRMSCzk6iyTchaGz6kTy3CwaNP0aYVvFsQgJpfUnRZNUlSVIVa2H1Uld5wNYjUXq9hAVOV-ySrvhu5nTggd0/s1600/IMG-20150119-WA0001.jpg" width="80" /></a></div>
</div>
</div>
அதிரை.மெய்சாhttp://www.blogger.com/profile/07191876547261572485noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5299561821912104711.post-42670541426682474992015-11-15T12:44:00.000+04:002015-11-15T12:52:03.696+04:00புறம்பேசுதல் நல்ல பழக்கமாகுமா.!?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
அதாவது
அடுத்தவன் குறை காண்பவன் அரை மனிதன் தன் குறை உணர்பவன் முழுமனிதன் என்று
ஒரு பழமொழி சொல்வார்கள் இப்பழமொழி பெரும்பாலும் புறம்பேசும் மனிதர்களுக்கே
மிகப் பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.<br />
<a name='more'></a>காரணம் இவ்வுலகில்
பிறந்த ஒவ்வொரு மனிதனிடத்திலும் ஏதாவது ஒரு ரீதியில் குறைபாடுகள்
இருக்கத்தான் செய்யும். அப்படிப்பார்க்கும்போது தன்னிடத்தில் பல
குறைகளையும் வைத்துக்கொண்டு அடுத்தவர்களின் குறைகளை அடுத்தவர்களின்
பிரச்சனைகளை, அடுத்தவர்களின் போக்குகளை அலசி ஆராய்ந்து அதைப்பற்றி
புறம்பேசுவது என்பது எப்படி நல்ல பழக்கமாக இருக்கமுடியும்.?<br />
<br />
பொதுவாக
உலக நடைமுறைப் பேச்சில் சில செய்திகளுக்கு உதாரணம் காட்டி பேசும்போது
அடுத்தவர்களின் நடவடிக்கையை சுட்டிக் காட்டியபடியும், வேறு ஏதாவது
சம்பவங்களை காரணம் காட்டி இணைத்துப் பேசுவதும் இயல்பான ஒன்றாக இருக்கிறது.
இதுவும் ஒருவகையில் புறம்பேசுவது போன்றுதான்.ஆனால் இப்படிப் பேசி
பழக்கப்பட்டு போய்விட்டதால் இதை அதிகபட்சம் நாம் புறம்பேசுவதாக எடுத்துக்
கொள்வதில்லை.<br />
<br />
ஆனால் நாம் அன்றாட வாழ்க்கையில் ஒருசிலரை
பார்த்திருப்போம். சதா அடுத்தவர்களுடைய செயல்பாடு, குறைபாடு, நடவடிக்கையை
,வாழ்க்கை விசயங்களை கண்காணிப்பதும், அதனைப்பற்றி பின்னால் இருந்து
விமரிசிப்பதும் அதுமட்டுமல்லாமல் சில நடக்காத சம்பவங்களையும் சேர்த்து
அல்லது மிகைப்படுத்தி பேசுவதும் அவர்களை குறித்து சமுதாயத்தார் மத்தியில்
அவப்பெயர் ஏற்ப்படும்படி கலங்கப்படுத்தியும் உரையாடிக் கொண்டிருப்பார்கள். <br />
<br />
இது
முற்றிலும் தவறான போக்கு மட்டுமல்ல. தவிர்த்துக் கொள்ளக் கூடியதாகவும்
இருக்கிறது.ஒருமனிதனைப் பற்றி அவர் இல்லாதபோது புறம்பேசுவது தனது சொந்த
சகோதரனின் மாமிசத்தை சுவைப்பதுபோன்று என்று இஸ்லாம் மார்க்கம் சொல்கிறது.
அப்படியானால் புறம்பேசுவது எந்த அளவுக்கு மோசமான செயல் என்பதினை
இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். இன்னும் சொல்லப்போனால் தன்னை
புறம்பேசுவதை அறிந்த ஒருவர் மனவேதனை அடைந்தால் அதனால் பாதிக்கப்பட்டவர்
மன்னிக்காதவரை இறைவன் ஒருபோதும் அவர்களை மன்னிப்பதில்லை. <br />
<br />
இது
அப்படி இருக்க சாதாரணமாக நாம் யோசித்துப் பார்த்தோமேயானால் புறம்பேசுதல்
என்பது ஒரு மனிதாபிமானம் இல்லாத மனிதநேயத்திற்கு அப்பாற்பட்ட செயலாகவே
இருக்கிறது.இப்படி புறம்பேசும்போது ஒரு நல்ல மனிதர் மனிதாபிமானம் உள்ள
மனிதர் காதில் கேட்பாராயின் காரி உமிழ்வார்கள். புறம்பேசுபவர் என்று
தெரிந்தால் நல்லமனிதர் இனிமையானவர் என்ற நற்ப் பெயர் மறைந்து
சமுதாயத்தார்களுக்கு மத்தியில் வெறுப்பிற்க்குரியவர்களாகி விடுவார்கள்.<br />
<br />
இதிலிருந்து
அடுத்தவர்களை குறைகூறிக் கொண்டும் புறம்பேசிக் கொண்டிருப்பது பலவீனமான
செயலாகும் என்பது நமக்கு தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இந்த உலகம் இந்த
வாழ்க்கை எதுவும் நிலையானதல்ல. மரித்து மண்ணோடுமண்ணாக மக்கப்போகும்
இவ்வுடலை மண்ணும் மனம்பொருந்தித் தின்னவேண்டும். இப்படி புறம்பேசி
அடுத்தவர்கள் வயிற்றெரிச்சலுக்கும் மனவேதனைக்கும் ஆளானோமேயானால் இந்த
உடம்பை எப்படி மண் திங்கும்.? இதையெல்லாம் சற்று யோசித்தால் மறந்தும்கூட
அடுத்தவர்களை யாரும் புறம்பேசமாட்டார்கள்.<br />
<br />
முகத்துக்கு முன்னாள்
ஒருமனிதனின் தவறுகள், குறைபாடுகளையும் சுட்டிக் காண்பித்து முகத்துக்குப் பின்னால் அம்மனிதனின்
நிறைவுகளை புகழ்ந்து பேசுபவர்தான் உண்மையான நல்லலெண்ணம் கொண்ட சிறந்த
மனிதர்களாவர். <br />
<br />
புறம்பேசுவதால் அடுத்தவர்கள் வயிற்றெரிச்சலுக்கும்
சாபத்திற்கும் ஆளாகுவதுடன் மேலும் பகைமையை வளர்த்துக் கொண்டு பலவகையிலும்
நமக்கு கேடுவிளைவிக்க கூடியதாகவே இருக்கிறது. ஆகவே எந்தப் புண்ணியமும்
இல்லாத இத்தகைய புறம்பேசும் போக்கை கைவிட்டு எதுவாயினும்
சம்மந்தப்பட்டவர்களிடம் நேருக்கு நேர் கேட்டறிந்து உண்மை நிலையை
அறிந்துகொள்வதை பழக்கப்படுத்திக் கொண்டு சமூகத்தார் மத்தியில் புறம்பேசாத
நல்லமனிதர் என்கிற களங்கமில்லாத நற்பெயரை நிலைநாட்டிக் கொள்வோமாக.!!!<br />
<br />
<div>
<div style="text-align: center;">
<span style="color: #b45f06;"><b><br /></b>
<b>அதிரை மெய்சா</b></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuAgGoXB64fLFNnikNpntVHt1SF8OOr5mHuQeCArGFMnVk9vdteeh9GTFRRMSCzk6iyTchaGz6kTy3CwaNP0aYVvFsQgJpfUnRZNUlSVIVa2H1Uld5wNYjUXq9hAVOV-ySrvhu5nTggd0/s1600/IMG-20150119-WA0001.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="80" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuAgGoXB64fLFNnikNpntVHt1SF8OOr5mHuQeCArGFMnVk9vdteeh9GTFRRMSCzk6iyTchaGz6kTy3CwaNP0aYVvFsQgJpfUnRZNUlSVIVa2H1Uld5wNYjUXq9hAVOV-ySrvhu5nTggd0/s1600/IMG-20150119-WA0001.jpg" width="80" /></a></div>
</div>
<br />
<br /></div>
அதிரை.மெய்சாhttp://www.blogger.com/profile/07191876547261572485noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-5299561821912104711.post-69544312583314976072015-11-05T11:16:00.001+04:002015-11-05T13:14:36.587+04:00அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே.!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே<br />
உன் விரிவுக்கு நிகராக யாதுமுண்டோ<br />
மொத்தநீரையும் உனதுள்ளடக்கி - உலகின் <br />
மூன்றில் இருபங்கை உனதாக்கி <br />
நித்தமும் நீ எழுப்பும் ஓசையினால் <br />
நெஞ்சம் கனத்திடும் நெகிழ்ச்சியிலே<br />
<a name='more'></a><br />
<br />
எத்தனைதான் ஆச்சரியம் உனதுள்ளே<br />
எண்ணி வியக்கிறோம் மனதினுள்ளே <br />
அத்தனையும் நிறைந்திட்ட அதிசயமே <br />
ஆராய முடியாத ஆழ்மனமே<br />
<br />
கலர்கலராய் பலநிறத்தில் உன் தோற்றம்<br />
காண்பதற்கு வியப்பூட்டும் அதிசயமே<br />
கொடிசெடியும் மலைமடுவும் உனதுள்ளே<br />
கோடான கோடி உயிர் வாழ்கிறதே <br />
<br />
சுனாமிப் பேரழிவைத் தந்தபோதும்<br />
பினாமிபோல் உன்மேல் பயணம் செய்வர்<br />
கனாவில் உன் சப்தம் கேட்டபோதும்<br />
கலங்காமல் மீனவர்கள் கடல் செல்வர்<br />
<br />
சமுத்திரமாய் சங்கமிக்கும் உன்நீர்க்கு<br />
சரிசமமாய் சொல்வதற்கு நிகரில்லை <br />
பவித்திரமாய் வெளிப்படும் உன்போக்கு<br />
பன்முகமும் காட்டுவது உன்சிறப்பு<br />
<br />
உனக்கென்று ஓர் உலகம் உவர்ப்புநீராம் - நீ <br />
உருவான இடம் எந்த நீர்நிலையாம்<br />
கருவாக நீ சுமக்கும் உயிர்களெல்லாம்<br />
உருவான விதம் நினைத்தால் அதிசயமே <br />
<br />
<br />
கற்பனைக்கு எட்டாத கடல்நீரே - நீ <br />
கசந்தாலும் உப்பாகி சுவைதருவாய்<br />
இத்தனை நீர் நிறைந்த ஆழ்கடலே <br />
இக முடிவானதும் எங்கு செல்வாய் ?<br />
<br />
<br />
<div>
<div style="text-align: center;">
<span style="color: #b45f06;"><b><br /></b>
<b>அதிரை மெய்சா</b></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuAgGoXB64fLFNnikNpntVHt1SF8OOr5mHuQeCArGFMnVk9vdteeh9GTFRRMSCzk6iyTchaGz6kTy3CwaNP0aYVvFsQgJpfUnRZNUlSVIVa2H1Uld5wNYjUXq9hAVOV-ySrvhu5nTggd0/s1600/IMG-20150119-WA0001.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="80" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuAgGoXB64fLFNnikNpntVHt1SF8OOr5mHuQeCArGFMnVk9vdteeh9GTFRRMSCzk6iyTchaGz6kTy3CwaNP0aYVvFsQgJpfUnRZNUlSVIVa2H1Uld5wNYjUXq9hAVOV-ySrvhu5nTggd0/s1600/IMG-20150119-WA0001.jpg" width="80" /></a></div>
</div>
<br /></div>
அதிரை.மெய்சாhttp://www.blogger.com/profile/07191876547261572485noreply@blogger.com0